search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric train"

    • மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    • மின்சார ரெயில் ரத்து தொடர்பாக தெற்கு ரெயில்வே அறிக்கை வெளியிட்டது.

    சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் அரக்கோணம் பணிமனையில் 12 ஆம் தேதி (நாளை) மற்றும் 14 ஆம் தேதி காலை 11.10 மணி முதல் மதியம் 1.10 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை சென்ட்ரலில் இருந்து 12 ஆம் தேதி (திங்கட்கிழமை) மற்றும் 14 ஆம் தேதி காலை 9. 10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது."

    "மேலும், அரக்கோணத்தில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி காலை 11.15 மற்றும் மதியம் 12 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது."

    "இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது."

    "மறுமார்க்கமாக, திருத்தணியில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது."

    "வேலூரில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் சித்தேரி - அரக்கோணம் இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது," என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று 55 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டன.
    • நாளைக்கான புறநகர் ரெயில் சேவை குறித்த அறிக்கையை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்பட்டன. இதன்படி இன்று 55 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டன.

    இந்நிலையில், நாளை சென்னை புறநகர் ரெயில் சேவைக்கான விரிவான அறிக்கையை தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ளது.

    அதன்படி, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 7.45 முதல் இரவு 7.45 வரை புறநகர் ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    தாம்பரம் ரெயில்வே யார்டு பணிகளுக்காக காலை 10 மணி முதல் பகல் 1 மணி மற்றும் இரவு 10.30க்கு மேலான ரெயில்கள் ரத்து என முன்பே கூறப்பட்டிருந்தது. அந்த நேரங்களில் மட்டும் பல்லாவரம்-எழும்பூர், கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு நாகர்கோவில் செல்லும் அந்த்யோதயா விரைவு ரெயில் 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    • எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்ததாக பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் தாம்பரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்றுவதற்காக விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

    தற்போது 8 நடைமேடைகள் உள்ளன. விரைவு ரெயில்களை கூடுதலாக இயக்க வசதியாக கூடுதலாக 2 தண்டவாளங்கள் அமைக்கப்படுகிறது. மேலும் சரக்கு ரெயில்கள் தடங்கல் இல்லாமல் செல்ல வசதியாக தனி பாதையும் அமைக்கப்படுகிறது. இதற்காக சிக்னல்கள் அமைப்பது, பாயிண்டுகள் அமைப்பது ஆகிய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்த பணிகள் காரணமாக கடந்த 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 14-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. பின்னர் பயணிகள் சிரமத்தை மனதில் கொண்டு அதை கைவிட்டு விடுமுறை நாளான இன்றும், நாளையும் மட்டும் மாற்றம் செய்தது.

    அதன்படி இன்று காலை 9.20 மணிக்கு பிறகு தாம்பரம்-கடற்கரை- செங்கல்பட்டு இடையே ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால் இன்று காலையில் மின்சார ரெயில்களில் கூட்டம் அலை மோதியது.

    வருகிற 1-ந்தேதி முதல் விரைவு ரெயில் போக்குரத்தில் மாறுதல் செய்யப்பட்டு உள்ளது.

    தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு நாகர்கோவில் செல்லும் அந்த்யோதயா விரைவு ரெயில் 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    எழும்பூரில் இருந்து தினமும் காலை 5.35 மணிக்கு காரைக்குடி செல்லும் விரைவு ரெயில் மாலை 3.45 மணிக்கு காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரெயில் ஆகிய 2 ரெயில்களும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

    இதே போல் எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

    சென்னையில் இன்று கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று காலை 9.20 மணி முதல் இந்த மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.


    தாம்பரம் பகுதிகளில் இருந்து மின்சார ரெயிலில் சென்னையின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்ய வந்த பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை அறிந்ததும் மாநகர பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். இதன் காரணமாக தாம்பரம் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கிருந்து மாநகர பஸ்களில் ஏறி செல்வதற்காக பயணிகள் சாலைகளில் காத்து நின்றதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    மேலும் பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப மாநகர பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக மாநகர பஸ்களில் ஏறுவதற்காக பயணிகள் முண்டியடித்தனர். இதனால் தாம்பரம் பகுதியில் மாநகர பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    • 5 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
    • பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் கூடுதலாக பேருந்துகளை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தாம்பரம் ரயில் நிலையத்தில் 23.07.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

    எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 23.07.2024 முதல் 14.08.2024 வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பெரிய பேருந்துகளை மா.போ.கழக இயக்க உள்ளது. மற்றும் பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் shuttle service-ஆக இயக்க உள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கூறியுள்ளது.

    • சென்னையில் வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ம் தேதி வரை 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • இதற்கு மாற்றாகவும், பயணிகள் வசதிக்காகவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் வரும் 23-ம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ம் தேதி வரையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, மதியம் 12, 12.10, 12.30, 12.50 இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையிலிருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கூடுவாஞ்சோி செல்லும் மின்சார ரெயில்கள் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    தாம்பரத்தில் இருந்து காலை 10.30, 10.40, 11, 11.10, 11.30, 11.40, மதியம் 12.05, 12.35, 1, 1.30, இரவு 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டிலிருந்து காலை 11, 11.30, மதியம் 12, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    இதற்கு மாற்றாகவும், பயணிகள் வசதிக்காகவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே 15 சிறப்பு மின்சார ரெயில்களும், பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே 15 சிறப்பு மின்சார ரெயில்களும், கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே 7 சிறப்பு மின்சார ரெயில்களும், செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே 7 சிறப்பு மின்சார ரெயில்கள் என மொத்தம் 44 சிறப்பு மின்சார ரெயில்கள் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்டு14-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

    சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, மதியம் 12.10, 12.30, 12.50, இரவு 10.40, 11.05, 11.30, 11.59, ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் பல்லாவரம் வரை இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 10.20, 10.40, 11, 11.20, 11.40, மதியம் 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40, இரவு 11.30, 11.55, 12.20, 12.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.

    கூடுவாஞ்சேரியிலிருந்து காலை 10.45, 11.10, மதியம் 12, 12.50, 1.35, 1.55, இரவு 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து காலை 10, 10.30, 11, 11.45, மதியம் 12.30, 1, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாம்பரத்தில் இருந்து டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12615) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.
    • சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, மதுரையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு சம்பர்க் கிராண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12651) நாளை முதல் செங்கல்பட்டு, மேல்பாக்கம், அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரம், சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் நிற்காது.

    திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (09420) நாளை முதல் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். செங்கல்பட்டில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17651) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.

    செங்கல்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17643) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12615) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.

    தாம்பரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12759) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் அனைத்தும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் நிற்காது. சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்லும்.

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி, காலை 9.20 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 24 சிறப்பு மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதற்கட்டமாக டிசம்பரில் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • 2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரெயில்களிலும் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரெயில், புறநகர் ரெயில்களில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் பயன்படுத்துவற்கான செயலியை உருவாக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    செயலியை உருவாக்க Moving Tech Innovation Private Limited நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது.

    முதற்கட்டமாக டிசம்பரில் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரெயில்களிலும் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு, ஆவடி செல்லும் மின்சார ரெயில் வில்லிவாக்கத்தில் இருந்து விரைவு பாதை வழியாக இயக்கப்படும்.
    • கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர் ரெயில் நிலையங்களில் நிற்காது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு, ஆவடி செல்லும் மின்சார ரெயில் வில்லிவாக்கத்தில் இருந்து விரைவு பாதை வழியாக இயக்கப்படும். மேலும் இந்த ரெயில் இன்று(புதன்கிழமை) முதல் வரும் 23-ந் தேதிவரை (17-ந்தேதி தவிர) கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர் ரெயில் நிலையங்களில் நிற்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
    • பயணிகள் பாதுகாப்பிற்காக தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒருநாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    பயணிகள் பாதுகாப்பிற்காகவும், ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

    பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.

    இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
    • ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

    சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோது வழக்கம்.

    ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். இது குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுவதுடன் பயணிகளுக்கு பெரிய சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.

    இந்நிலையில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார ரெயில் சேவை இயங்காது. சென்னை கடற்கரையில் இருந்து நண்பகல் 12.40- க்கு புறப்படும் மின்சார ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக தங்களது பயணத்தை திட்டமிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது.
    • பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரெயில் உள்ளிட்ட மூன்று வசதிகள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனித்தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள்.

    மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி மூன்றிலும் மக்கள் பயணிக்க முடியும்.

    அதன்படி, சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில் அடுத்த மாதம் இந்த திட்டம் செயலுக்கு வர உள்ளது.

    இந்நிலையில் இத்திட்டம் ஜூன் 2வது வாரத்தில் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பொதுப்போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் வழங்கப்பட உள்ளது. பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    • காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • தகவலை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நாளை (12-ந்தேதி) காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.25 மணி, 10 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரெயில்கள் சிங்கபெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும்.

    மறு மார்க்கமாக நாளை காலை 11.20 மணி, பிற்பகல் 12 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு புறப்படும் ரெயில்கள் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கபெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்.

    மேலும் பயணிகள் வசதிக்காக விசாகப்பட்டினம் - சென்னை சென்ட்ரல் இடையே இயங்கும் வாராந்திர அதிவிரைவு ரெயிலில் (எண்.22869, 22870) வருகிற 13-ந்தேதி முதல் ஜூன் 11-ந்தேதி வரை ஒரு கூடுதல் படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

    ×