search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electrical warning"

    • பொதுமக்கள் அறுந்து கிடக்கும் மின்கம்பி, சேதமான மின்கம்பியை தொட வேண்டாம்.
    • மின்வேலி அமைப்பது கண்டறியப்பட்டால் மின் இணைப்பு துண்டிக்கப் படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மின்துறை புயலை எதிர்கொள்ளவும், அவசர பணிகளை விரைந்து முடிக்கவும். தொழில்நுட்ப பணியாளர்களை அமர்த்தியுள்ளது. மழைக் காலங்களில் ஏற்படும் மின் தடையை உடனுக்குடன் அறிய, அவசர கட்டுப்பாட்டு அறை மின் துறை தலைமை அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

    பொதுமக்கள் மின்தடை பிரச்சினைகளை 0413 2339832 என்ற தொலை பணி பேசி எண்ணிலும், 18006 231912 அல்லது 1912 என்ற எண்ணில் தெரிவிக் கலாம்.

    பொதுமக்கள் அறுந்து கிடக்கும் மின்கம்பி, சேதமான மின்கம்பியை தொட வேண்டாம்.

    அருகில் உ ள்ள மின் துறை அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம். விவசாய நிலங்களில் எலி, காட்டு பன்றி போன்ற விலங்கு களிடமிருந்து பயிர்களை காக்க சிலர் மின்சார வேலி அமைக்கின்றனர். இதில் சில நேரம் உயிரிழப்பு ஏற்படுகிறது.

    விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்ற மாகும். மின் கம்பங்களில் ஆடு, மாடு போன்ற விலங்கு கனை கட்டக்கூடாது. மின்வேலி அமைப்பது கண்டறியப்பட்டால் மின் இணைப்பு துண்டிக்கப் படும்.

    இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

    ×