search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Emu Kozhi company"

    நீதிமன்ற உத்தரவுபடி ஈமு கோழி நிறுவனத்துக்கு சொந்தமான விவசாய நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈமு கோழி நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரம் மூலம் நிதி திரட்டியது.

    இதனை நம்பிய ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்து பங்குதாரர்களாக சேர்ந்தனர்.

    அந்த டெபாசிட் முதிர்வு அடைந்ததும் நிறுவனத்தை அணுகியபோது பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு முதிர்வுத்தொகை திருப்பித் கொடுக்கப்படாமல் இழுக்கப்பட்டது.

    இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் நிறுவனங்களை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். இது குறித்து கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    ஈமு கோழி நிறுவன சொத்துக்களை முடக்கி அந்த தொகையை இழப்பீடாக பங்குதாரர்கள் பிரித்து கொடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தாளவாடி அடுத்த திகினாரையில் ஈமு கோழி நிறுவனத்துக்கு சொந்தமான 13.5 ஏக்கர் நிலத்தை பக்கத்து தோட்டத்துக்காரருக்கு ஈமு கோழி நிறுவனம் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து தாளவாடி வருவாய் துணை வட்டாட்சியர் மகேஸ்வரி, நில வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    அவர்கள் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    அதில் இந்த இடம் ஈமு கோழி நிறுவனத்துக்கு சொந்தமானது. யாரும் இதை வாங்கவோ விற்கவோ கூடாது. அதையும் மீறிவாங்கினால் செல்லாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. #Tamilnews

    ×