search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineering Consultancy"

    • பொதுப் பிரிவின்கீழ் 93 ஆயிரத்து 59 பேர் தகுதி பெற்றனர்.
    • மாணவர்களுக்கு நாளை கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நடந்து வருகிறது. 3-வது சுற்று கலந்தாய்வு கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க பொதுப் பிரிவின்கீழ் 93 ஆயிரத்து 59 பேர் தகுதி பெற்றனர்.

    இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தவர்களில் பொதுப் பிரிவில் 58 ஆயிரத்து 889 பேர், 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 4 ஆயிரத்து 954 பேர் என மொத்தம் 63 ஆயிரத்து 843 பேருக்கு நேற்று காலை 10.30 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    இதை உறுதி செய்ய அவர்களுக்கு இன்று மாலை 5.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மாணவர்களுக்கு நாளை காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

    • முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
    • மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.

    இதற்கு ஒரு லட்சத்து 87,693 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ந்தேதி வெளியிடப்பட்டது.

    அதைத் தொடர்ந்து கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இதில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்புப் பிரிவில் வரும் மாணவர்களுக்கு இன்றும், நாளையும் நடக்கிறது. இவர்களுக்கு விளையாட்டுப் பிரிவில் 38, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில் 11, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 579 இடங்கள் உள்ளன.

    இந்த இடங்களுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதன்படி மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இரவு வெளியிடப்படும்.

    அதற்கு மறுநாள் மதியம் 3 மணிக்குள் ஒப்புதல் அளித்து உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

    தொடர்ந்து இதர சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

    அதன்பின் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 28-ந்தேதி தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறும். அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
    • அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு மாதம் முன் கூட்டியே தொடங்குகிறது. ஜூலை 2-ந்தேதி கலந்தாய்வு தொடங்கி நடைபெறும்.

    பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கல்லூரிகளில் திறந்து இருக்கும். சி.பி.எஸ்.இ., மாநில கல்வி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்க உள்ள நிலையில் ஜூலை 7-ந்தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும்.

    பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

    அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை கட்டணம் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் பலவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. ஏழை மாணவர்கள் நலன் கருதி எல்லா கல்லூரிகளிலும் சேர்க்கை கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 வீதம் ஒவ்வொரு ஆண்டிற்கும் இனி வசூலிக்கப்படும்.

    அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. 22-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×