search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eswaran Temple"

    • ஜனவரி 27-ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • 48 நாட்களுக்கான மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறுகிறது.

    காங்கயம் :

    காங்கேயம் அருகே உள்ள பாப்பினி கிராமம் மட வளாகத்தில் பிரதான புகழ்பெற்ற ஸ்ரீ ப்ருஹன்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரகுபதி நாராயண பெருமாள் திருக்கோவில்கள் உள்ளன. கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமூகத்தின் தோடை, கண்ணந்தை காடை, கீரை, ஆகிய நான்கு குலத்தவர்களின் குலதெய்வமாக விளங்கி வரும் கோவில்களில் கடந்த ஜனவரி 27-ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து 48 நாட்களுக்கான மண்டல பூஜை ஜனவரி 28ஆம் தேதி முதல் தொடங்கி வரும் 16.3.23ம் தேதி அன்று 48 நாட்களுக்கான மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறுகிறது. அன்று அம்பிகை மற்றும் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு 48 நாள் மண்டலாபிஷேக சிறப்பு வழிபாடுகள் செய்து நிறைவு வழிபாடாக 108 சங்காபிஷேக பூஜைகளும், சிறப்பு யாக வழிபாடுகளும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில்களின் தலைவர் ஏ.வரதராஜ், நிர்வாக தலைவர் எஸ் தங்கமுத்து செயலாளர் எம் ராமசாமி,பொருளாளர்.பி அர்ச்சுணன்,பாப்பினி கோவில் தலைவர் .தம்பி வெங்கடாசலம் பால சமுத்திரம் புதூர் கே ஆர் பாலசுப்பிரமணியம் மற்றும் கோவில்களின் கொங்கு வேளாளர் தோடை கண்ணந்தை காடை மற்றும் கீரை குலத்தோர் சங்கத்தின் நிர்வாகிகளும் பாப்பினி வீரசோழபுரம் கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.

    ×