search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Extortion of jewelery"

    • செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.17 ஆயிரம் பணத்தை அந்த வாலிபரிடம் கொடுத்தார்.
    • மூதாட்டியின் மகன் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த வழியாக 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் ஜோதிடம் பார்க்க வேண்டுமா ஜோதிடம் என சத்தம் போட்டபடி சென்றார்.

    அந்த வாலிபர் மூதாட்டியை பார்த்து ஏற்கனவே இந்த வீட்டில் 2 உயிர் போய் உள்ளது. மீண்டும் இந்த மாதத்தில் ஒரு உயிர் போக உள்ளது. அவரை காப்பாற்ற வேண்டும் என்றால் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த வாலிபரை அழைத்து உயிர் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.

    உடனடியாக அந்த வாலிபர் மூதாட்டியிடம் நீங்கள் அணிந்து இருக்கும் நகைகளை கழற்றி என்னிடம் கொடுங்கள் நான் சாமி முன்பு வைத்து பரிகாரம் செய்து விட்டு தருகிறேன் என்றார். இதனை உண்மை என நம்பிய மூதாட்டி தான் அணிந்து இருந்த செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.17 ஆயிரம் பணத்தை அந்த வாலிபரிடம் கொடுத்தார். அந்த வாலிபர் மூதாட்டி யிடம் 21 நாட்களுக்கு இதனை யாரிடம் சொல்ல கூடாது. அவ்வாறு கூறினால் பரிகாரம் பழிக்காமல் போய்விடும் என கூறி விட்டு அங்கு இருந்து சென்றார்.

    மூதாட்டி தனது மகன் வந்ததும் நடந்த சம்பவங்களை அவரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் உயிர் பலி ஏற்படாமல் தடுக்க பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    ×