என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Farmers Contribution Scheme"
- இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் பங்களிப்பு திட்டத்தில் சேரலாம்.
- ஒரு விவசாயி அனுமதிக்கப் படாத இடுபொருள் பயன்படுத்தினால் அவர் குழுவில் இருந்து நீக்கப்படுவார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் குழுக்கள் அமைத்து உரிய கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்று பெற்று வருகின்றனர். ஒரே கிராமத்தில் அல்லது அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக அமைத்து எவ்வித கட்டணமும் இல்லாமல் பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் அங்ககச் சான்று பெறலாம்.
இவ்வாறு சான்று பெற்ற பொருட்களை உள்நாட்டு அளவில் மட்டும் விற்பனை செய்யலாம். குறைந்த பட்சம் 10 விவசாயிகள் முதல் 50 விவசாயிகள் வரை இணைந்து குழுவாக அமைத்து அங்கக முறைப்படி விவசாயம் செய்வோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யும் விவசாயிகள் உறுதிமொழி படிவம், பண்ணை விபரங்கள், ஆதார் நகல், சிட்டா ஆகியவற்றை மண்டல குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குழுவிற்கு அங்கீகாரம் வழங்கப்படும். குழு உற்பத்தியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் உறுப்பினர்கள் குழுவில் உள்ள மற்ற விவசாயிகளின் வயலை ஆய்வு செய்ய வேண்டும். 3-ம் நபர் ஆய்வு இல்லை. உற்பத்தி செய்யப்படும் விளை பொருள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா? என உறுதி செய்ய உபயோகிப்பாளர் ஒருவரை ஆய்விற்கு அமைத்துக கொள்ளலாம்.
ஆய்வு முடிவுகள் குழுவின் ஒப்புதலுக்கு வைக்கப்படும். உள்ளூர் குழுவின் முடிவு திருப்திகரமாக இருந்தால் சான்று வழங்கப்படும். தனிப்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தில் சான்று பெற்றவுடன் 2 வருட காலத்திற்குள் ஏதாவது ஒரு குழுவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறான தகவல்கள் இருந்தால் குழு இடை நீக்கம் செய்யப்படும்.
குழுவில் யாரேனும் ஒரு விவசாயி அனுமதிக்கப் படாத இடுபொருள் பயன்படுத்தினால் அவர் குழுவில் இருந்து நீக்கப்படுவார். இந்த திட்டத்தில் கட்டணமின்றி எளிமையான முறையில் பதிவு செய்வதால் விவசாயி களுக்கு பயனுள்ளதாகவும், அதிக அளவில் விவசாயிகள் அங்ககச் சான்று பெற முடியும். மேலும் விவசாயிகள் உள்ளூரை சேர்ந்த நபர் என்பதால் இயற்கையில் விளைந்த பொருள் என்ற நம்பகத்தன்மை வாங்குபவர்களுக்கு ஏற்படும். நுகர்வோர்கள் இடைதரகரின்றி பண்ணையிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
எனவே ஒரே ஊரில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் குழுவாக இணைந்து பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் பதிவு செய்து சான்று பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்