search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Welfare Centre"

    • கீழக்கரையில் விவசாயிகள் நல மையம் திறப்பு விழா நடந்தது.
    • 100% இயற்கை உரம் வழங்கும் திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யும் என்று விளக்கிக் கூறப்பட்டது.

    கீழக்கரை

    இந்தியாவில் 1.25 லட்சம் விவசாயிகள் நல மையங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள மையத்தில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறப்பு விழா நடந்தது. பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் வழங்குவதில் மீதமுள்ள 2000 மேலும் விவசாயிகள் 70 சதவீதம் இயற்கை உரம் 30 சதவீதம் கெமிக்கல் உரம் சேர்த்து பயன்படுத்துவது குறித்தும் விரைவில் 100% இயற்கை உரம் வழங்கும் திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யும் என்று விளக்கிக் கூறப்பட்டது.

    இதில் விவசாயிகள் அணி மாநில பொதுச்செயலாளர் பிரவீன், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், மாநில விவசாய அணி நிர்வாகி சுதாகர் ரெட்டி, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவர், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டி, கயிறு வாரிய தலைவர் குப்புராம், ராமநாதபுரம் மாவட்ட விவசாய அணி ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×