search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fertility Problems"

    • மனித உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களிலும் ஸ்டெம் செல் உள்ளது.
    • அனைத்திற்கும் தீர்வாக அமைவது ஸ்டெம் செல் சிகிச்சையாகும்.

    இன்றைய கால கட்டத்தில் மருத்துவ ரீதியாக அதிகரித்து வருகிற பலவிதமான பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக வயதான பிறகு ஏற்படுகிற பலவிதமான தேய்மானங்கள் மற்றும் வயதான பிறகு ஏற்படும் பாதிப்புகள் ஆகிய அனைத்திற்கும் தீர்வாக அமைவது ஸ்டெம் செல் சிகிச்சையாகும்.

    மனித உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களிலும் ஸ்டெம் செல் உள்ளது. நமது உடலில் உள்ள செல்களில் ஏதாவது ஒன்று பழுதானாலோ அல்லது வயது மாற்றங்களினால் தேய்மானம் அடைந்தாலோ அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் திசுக்கள் சேதம் அடைந்தாலோ அதனை சீர் செய்வதற்கான அடிப்படையே ஸ்டெம் செல் தான்.

    ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்:

    அதன் ஆரம்பம் பிளேட்லெட் ஆக இருந்தாலும், முடிவானது ஸ்டெம் செல் தான். ஸ்டெம் செல் நன்றாக இருக்கிற திசுக்களில் பழுது பார்க்கும் வேலை, மீளுருவாக்கம் மற்றும் புதிய திசுக்களை உருவாக்குதல் ஆகிய அனைத்துமே ஸ்டெம் செல்களால் மட்டும்தான் ஏற்படுகிறது. கடந்த பல வருடங்களாகவே ஸ்டெம் செல் பற்றிய பலவிதமான ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்து வருகிறது.

    ஆரம்பத்தில் விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஸ்டெம் செல் ஆராய்ச்சியானது, அதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை தொடர்ந்து மனிதர்களிடையே நடத்தப்பட்டது. அதிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவ ரீதியான விஷயங்கள் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

    ஆரம்ப கால கட்டத்தில் ஸ்டெம் செல் தெரபி என்பது குறிப்பாக ரத்த புற்றுநோய் பாதித்தவர்களுக்கான தீர்வாக அமைந்தது.

    இது தொடர்பாக கடந்த காலங்களில் பல ஆய்வுகளும் நடந்துள்ளன. தற்போதைய காலகட்டத்தில் எல்லாவிதமான வயதான மாற்றங்களுக்கும் இந்த ஸ்டெம்செல் தெரபி என்பது மிக முக்கியமானதாக கருதப்படு கிறது.

    இதில் மீசன்கைமல் என்கிற ஸ்டெம் செல் தான் மனிதனின் உடல் உறுப்புகளுக்கு ஏற்ற மாதிரி செயல்படுகிறது. அதாவது மீசன்கைமல் ஸ்டெம் செல்லை எடுத்து ஒரு பெண்ணின் தோலில் செலுத்தினால் தோல் பகுதி புத்துணர்வு பெறும். தோல் பகுதியில் ஏற்பட்டுள்ள வயதான மாற்றங்கள் மாறும். வயதான தோற்றத்துடன் கூடிய அந்த தோலை இளமையாக மாற்றும் தன்மை கொண்டது.


    வயதான மாற்றங்களை சரி செய்வதற்கான வழிமுறை:

    பொதுவாக ஒருவருக்கு வயது கூடும் போது வயதான மாற்றங்கள் எல்லா உறுப்புகளிலும் ஏற்படும். அதாவது மனிதர்களுக்கு வயதாகும் போது தோல், முடி, இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் உள்ள செல்களுக்கும் வயதாகும்.

    அந்த செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா செயலிழக்க ஆரம்பித்து, அதனுடைய ஆற்றல் குறைவாகும் போது, அந்த செல்லின் ஆற்றலும் குறைவாகி, செல்கள் இறந்து போவதற்கு வாய்ப்பு உண்டு.

    இதுபோன்று அனைத்து செல்களும் ஒரு கட்டத்தில் இறக்கும்போது தான், ஒரு மனிதனின் இறப்பு என்பது முடிவாகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் வயதாகும் போது அவர்களின் உறுப்புகளில் இருக்கும் திசுவில் உள்ள செல்களுக்கும் வயதான மாற்றங்கள் ஏற்பட்டு உடலில் செயலிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இந்த வகையில் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது நமது உடலில் ஏற்படும் வயதான மாற்றங்களை சரிசெய்து, உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பதற்கான ஒரு அருமையான வழிமுறையாகும்.

    ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை பற்றி பலருக்கும் பலவிதமான பயம் இருந்தது. ஸ்டெம் செல் சிகிச்சையால் ஏதாவது பின்விளைவுகள் வருமோ, பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளதோ, நீண்ட நாள் பிரச்சினைகள் ஏதாவது ஏற்படுமோ என்ற அச்சம் இருந்தது.

    ஆனால் இதை பற்றி தெளிவாக சிந்தித்தால் அச்ச உணர்வு ஏற்படாது. மருத்துவ சிகிச்சையின் போது ரத்தம் ஏற்றுகிறோம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்கிறோம். அப்போதெல்லாம் எந்த பிரச்சினையும் ஏற்படுவது இல்லை.

    அதே போலத்தான் நமது உடலில் உள்ள செல்லை எடுத்து நமது உடலிலேயே செலுத்தும் போது எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது. இதனை அடிப்படையாக கொண்டே ஸ்டெம் செல் பற்றி பலவிதமான ஆய்வுகள் நடந்து வருகிறது.

    பெண்களுக்கு வயதாகும் போது அவர்களின் உடலில் பலவி தமான மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த உடலியல் மாற்றங்களை சீர் செய்வதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை ஒரு நல்ல வழிமுறையாகும். ஸ்டெம் செல் தெரபி என்பது பெண்களுக்கு பலவிதமான பிரச்சினைகளுக்கும் நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.

    சினைமுட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஸ்டெம் செல்:

    பெண்களின் மிக முக்கியமான ஒரு விஷயமே குழந்தைபேறு தான். ஒரு பெண் குழந்தை பேறு பெறுவதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். ஒன்று சினை முட்டைகள், மற்றொன்று பெண்ணின் கர்ப்பப்பை ஆகியவை ஆகும்.

    சினை முட்டைகள் சீரான அளவில், நல்ல எண்ணிக்கையில், நல்ல தரத்தில் இருந்தால் கண்டிப்பாக அந்த சினை முட்டைகளால் ஆரோக்கியமான குழந்தை பேறு பெற முடியும். இந்த குழந்தை பேறு என்பது இயற்கையான முறையிலோ அல்லது செயற்கையான முறையிலோ அமையலாம்.

    ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் சினை முட்டைகள் குறைவாக இருக்கும் பெண்களுக்கு மீசன்கைமல் ஸ்டெம் செல் செலுத்துவதன் மூலமாக சினை முட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் சினை முட்டைகளின் தரமும் மேம்படுத்தப்படுகிறது.

    சினை முட்டைகளின் தரமும், எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படுகிறது. சினை முட்டைகள் குறைவாக உள்ள பல பெண்கள், ஸ்டெம் செல் சிகிச்சை மூலமாக சினை முட்டைகளின் தரமும், எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில் இயற்கையாகவே கருத்தரித்து குழந்தை பேறு பெற்றுள்ளனர்.

    என்னிடம் ஒரு பெண், குழந்தை பேறு சிகிச்சை பெறுவதற்காக வந்தார். அவர் ஏற்கனவே மூன்று முறை ஐவிஎப் சிகிச்சை பெற்று அது தோல்வியில் முடிந்ததாக என்னிடம் தெரிவித்தார். என்னிடமும் ஐவிஎப் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறினார்.

    அந்த பெண்ணுக்கு முதலில் ஸ்டெம் செல் சிகிச்சை அளித்தோம். வழக்கமாக ஸ்டெம் செல் தெரபி கொடுத்து இரண்டு மாதங்கள் கழித்து, மூன்றாவது மாதத்தில் தான் கருத்தரிப் பதற்கான சிகிச்சையை ஆரம்பிப்போம். ஆனால் இரண்டாவது மாதத்தில் காத்திருப்பு காலத்தின் போது அவருக்கு ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தோம்.

    ஆனால் அவர் இயற்கையாகவே கருத்த ரித்திருந்தார். இப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சினை முட்டைகளின் எண்ணிக்கை, வளர்ச்சி, தரம் ஆகிய அனைத்தையுமே ஸ்டெம் செல்லானது மேம்படுத்தியுள்ளது. கருமுட்டைகள் அதிகரிப்பதற்கு இது ஒரு நல்ல வழிமுறையாகும்.


    கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சியில் ஸ்டெம் செல் சிகிச்சையின் பங்கு:

    குழந்தை பேறுக்கு இரண்டாவது விஷயம் கர்ப்பப்பை ஆகும். கர்ப்பப்பையின் உள் சுவரில் உள்ள செல்கள் வரிசை தான் கரு ஒட்டி வளருவதற்கு தேவையான ஒன்றாகும். இந்த செல்கள் வரிசை சீராக இல்லாத நிலையில் கருத்தரிக்க முடியாமல் பல பெண்கள் கஷ்டப்படுகிறார்கள்.

    காசநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களுக்கு இந்த கர்ப்பப்பை உள்சுவரானது சிதைந்து விடும். அல்லது சில நேரங்களில் அழிந்து விடும். இப்படிப்பட்ட பெண்களுக்கு இதை சரி செய்வது என்பது மிகப்பெரிய சவால்.

    இவர்கள் அனை வருக்கும் குழந்தை பேறு பெறு வதற்கு இப்போதைய காலகட்டத்தில் உள்ள ஒரே முறை ஸ்டெம் செல் சிகிச்சை தான். கர்ப்பப்பையில் உள்ள பழுதான சுவர் பகுதியை சீராக்குவதற்கு மீசன்கைமல் ஸ்டெம் செல்லை கர்ப்பப்பை உள் சுவர்களில் செலுத்துகிறோம்.

    இதனை செலுத்தும் போது கர்ப்பப்பை உள்சுவரில் உள்ள பழுதான திசுக்கள் அனைத்தும் சீராகி கர்ப்பப்பையின் உள்சுவர் வளர்ச்சி சரியாகும்.

    இதன் மூலம் ஸ்டெம் செல் சிகிச்சையானது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பெண்கள் கருத்தரிப்பதற்கான இரண்டு முக்கியமான பணிகளை இந்த ஸ்டெம் செல் தெரபி செய்கிறது.

    ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் ஆண்களுக்கும் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். ஏனென்றால் குழந்தை பேறு என்பது ஆண்களுக்கு முக்கியம்தான். அந்த வகையில் ஆண்களின் விந்து பையில் இந்த ஸ்டெம் செல்லை செலுத்தும் போது, விந்து உற்பத்தியே இல்லாத ஆண்களுக்கும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் விந்தணுக்கள் உருவாகிறது.

    ஒரு விந்தணு இருந்தாலே போதும், முட்டையுடன் செலுத்தி கருத்தரிப்பு செய்ய முடியும். இந்த வகையில் விந்தணுக்களே இல்லாத ஆண்களுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் விந்தணுக்களை உருவாக்கி, முட்டையில் செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். 

    • கருமுட்டை வளர்ச்சிக்கு சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.
    • மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள்.

    கருத்தரித்தலில் பெண்களுக்கு முக்கியமானது கருமுட்டை, அதே போன்று ஆண்களுக்கு விந்தணுக்களின் தரம் முக்கியமானது. இவற்றில் உண்டாகும் குறைபாடுகள் கருத்தரித்தலில் சிக்கலை உண்டு செய்துவிடும்.

    ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே மூன்று லட்சம் கருமுட்டைகளை கொண்டு தான் பிறக்கின்றன. குழந்தை வளரும் போது இந்த கருமுட்டையின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்.

    பெண் குழந்தை வளர்ந்து பூப்படையும் போது ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை மட்டுமே முழு வளர்ச்சி அடைந்து கர்ப்பபையை சென்றடையும். பிறகு இவை விந்துவுடன் இணைந்து கருத்தரித்தலை உண்டு செய்யும்.

    கருமுட்டையானது விந்தணுக்களுடன் இணையாத நிலையில் கர்ப்பப்பை சுவருடன் இணைந்து ரத்தமாக வெளியேறும். இந்த உதிரபோக்கு தான் மாதவிடாய் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.

    அதனால் தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருமுட்டை என்பது மிக முக்கியமானதாக பார்க்கபடுகிறது.

    கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் ஆரோக்கியம் என்பது உணவிலும் அடங்கியிருக்கிறது. முழு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் தரமான விந்தணுக்கள் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை உருவாக்கும்.

    கருவுற விரும்பும் தம்பதியர்கள் மருத்துவரை அணுகும் போது கருமுட்டை வளர்ச்சி மற்றும் விந்தணுக்கள் குறைபாடு பற்றி கூறியிருந்தால் நீங்கள் உங்கள் உணவு திட்டத்தை மாற்றுங்கள்.

    அதில் முதலாவதாக புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிருங்கள். இருவரும் மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள். தூக்கம் போதுமான அளவு இருக்கட்டும்.

    விந்தணுக்கள் அதிகரிக்க மாத்திரைகள் டாக்டர் கொடுத்திருந்தாலும் வீட்டில் உணவு முறையில் ஆரோக்கியத்தை கொண்டு வரலாம். அதில் முதலாவது பச்சைகாய்கறிகள். குறிப்பாக கீரைகள். கீரையில் முருங்கைக்கீரை கொடுக்கலாம்.

    பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் போன்றவை சேர்க்க வேண்டும். பழங்காளில் ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்.

    அதே போன்று காய்கறிகள், பழங்கள் என எதுவாக இருந்தாலும் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்கள், காய்கறிகள் எடுத்துகொள்ள வேண்டும்.

    பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் இந்த உணவுகள் உதவும் என்றாலும் அதோடு பெண்கள் சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.

    வாழைப்பழம், ஆரஞ்சு, அவகேடோ என இன்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த பழங்களை எடுத்துகொள்ள வேண்டும்.

    மேலும் நல்ல ஊட்டச்சத்து என்பது நீங்கள் விரும்பும் உணவுகளை தவிர்க்க வேண்டுமென்பது அல்ல. சரியான உணவுகளை எடுத்துகொள்வது. குழந்தையை பெற முயற்சிக்கும் போது புரதம், கார்போஹைட்ரேட், ஆரொக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சீரான உட்கொள்ளலுடன் ஆரோக்கியமான ஊட்டச்சத்து அவசியம்.

    ×