search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flashing sticker"

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வர தொடங்கி உள்ளனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    பெருவிழாவை யொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வரத் தொடங்கி உள்ளனர்.

    இவர்கள் வெயில் நேரங்களில் ஓய்வு எடுத்தும், காலை மற்றும் மாலை நேரங்களில் மாதா பாடல்களை பாடியவாறும் நடைபயணம் மேற்கொள்வர்.

    அதன்படி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை கடந்து பேராலயம் சென்றடைவர்.

    அவ்வாறு, இரவில் சாலையில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக விபத்தில்லாமல் சாலைகளில் நடந்து செல்லும் வகையில் அவர்களது பைகள், உடைமைகளில் இரவில் ஒளிரும் பிரதிபளிப்பு ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீசார் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதன் மூலம் எதிர்பாராத வகையில் ஏற்படும் அசம்பாவிதங்கைளை தடுக்கலாம். இதற்கு மக்கள் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

    • உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு கம்பி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் பைப்புகளை போதையில் திருடி விற்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைபாளையத்தைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை (வயது 48),ஆறுமுகம் (32),வெங்கடேசன் (35) மற்றொரு ஏழுமலை (35) ஆகியோர் கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் பைப்புகளை போதையில் திருடி விற்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்கானிப்பாளார் முகேஷ் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராமதாஸ் விசாரணை நடத்தி ஏழுமலை, மற்றொரு ஏழுமலை ஆகியோரை கைது செய்தார். ஆறுமுகம்,வெங்கடேசன் ஆகியோரை தேடி வருகிறார்.

    ×