என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Flooding at all waterfalls"
- காலை 11.30 மணிக்கு தொடங்கி சுமார் 3 மணி நேரம் நகரின் பல்வேறு பகுதிகளில் கன மழையும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
- மழையில் நனைந்தபடியும் குடை பிடித்தபடியும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. தரைப்பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் 5 நாட்களில் மட்டும் சுமார் 23 செ.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டிய நிலையில் நேற்று காலை முதல் மேகமூட்டங்கள் தரையிறங்கியது.
அதனை தொடர்ந்து காலை 11.30 மணிக்கு தொடங்கி சுமார் 3 மணி நேரம் நகரின் பல்வேறு பகுதிகளில் கன மழையும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே பல்வேறு இடங்களை கண்டுகளித்த னர். உள்ளூர் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட னர். இந்நிலையில் இன்றும் காலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மழை காரணமாக ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசலின்றி ஓட்டுநர்கள் பயணம் செய்தனர்.
இருப்பினும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்ததால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட னர். தொடர் மழை காரணமாக நகரில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாலை நேரம் முதல் கடும் குளிர் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் இதமாக அனுபவித்து வருகின்றனர். இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மழையில் நனைந்தபடியும் குடை பிடித்தபடியும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்