search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flying Taxi"

    • சோதனை ஓட்டத்தில் மிட் நைட் ரக விமானம் மணிக்கு 360 கி.மீ வேகத்தில் வானில் பறந்து சென்றது.
    • பறக்கும் டாக்சி சேவையில் அபுதாபி-துபாய் இடையே பயண நேரம் 10 முதல் 20 நிமிடமாக குறையும்.

    அபுதாபி:

    அமீரகத்தில் போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும், மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு முயற்சிகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நாடு முழுவதும் வரும் காலக்கட்டங்களில் பறக்கும் டாக்சியை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எரிபொருளை சேமிக்கவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

    இதில் தற்போது துபாயை தொடர்ந்து அபுதாபியில் அமெரிக்காவின் ஆர்ச்சர் நிறுவனத்தின் மிட் நைட் ஏர் கிராப்ட் என்ற விமானம் அபுதாபியில் பறக்கும் டாக்சியாக இயக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது முதற்கட்டமாக அபுதாபி மாநகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத்துறை ஒத்துழைப்பில் மிட் நைட் ஏர் கிராப்ட் விமானம் வெற்றிகரமாக வானில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    இந்த விமானம் மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் சுழலும் இறக்கைகளை வைத்துள்ளதால் ஹெலிகாப்டர் போல செங்குத்தாக நின்ற இடத்தில் இருந்தே மேலெழும்பி பறக்க முடியும். அதேபோல் விமானம் போன்று நேராக செல்லக்கூடியது ஆகும். நேற்று நடந்த சோதனை ஓட்டத்தில் மிட் நைட் ரக விமானம் மணிக்கு 360 கி.மீ வேகத்தில் வானில் பறந்து சென்றது. இந்த விமானத்தை பயணிகள் மட்டுமல்லாமல் சரக்குகளை ஏற்றி செல்லவும் பயன்படுத்த முடியும். பறக்கும் டாக்சி போக்குவரத்துக்கான ஆதரவை அபுதாபி முதலீட்டு அலுவலகம் அளித்துள்ளது.

    அடுத்த ஆண்டில் (2025) அறிமுகம் செய்யப்படும் பறக்கும் டாக்சி சேவையில் அபுதாபி-துபாய் இடையே பயண நேரம் 10 முதல் 20 நிமிடமாக குறையும். நகருக்குள் மட்டும் செல்ல 350 திர்ஹாமும், வெளியூர்களுக்கு செல்ல 800 முதல் 1,500 திர்ஹாம் வரையும் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என ஆர்ச்சர் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நிகில் கோயல் தெரிவித்துள்ளார். 4 பேர் பயணம் செய்யும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் படிப்படியாக கட்டணங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என மேலும் அவர் தெரிவித்தார்.

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஹைப்ரிட் பறக்கும் டாக்சி ஃபார்ன்பரோ சர்வதேச விமான கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. #RollsRoyce



    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் பறக்கும் டாக்சி என்ற பெயரில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வாகனம் செங்குத்தாக டேக் ஆஃப் ஆகி, தரையிறங்கும் வசதியை கொண்டிருக்கும் என ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது.

    லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஹைப்ரிட் வாகனத்தை உருவாக்கும் திட்டத்தை முதல் முறையாக ஃபார்ன்பரோ விழாவில் அறிவித்தது. அடுத்த 18 மாதங்களுக்குள் செங்குத்தாக டேக் ஆஃப் ஆகி, தரையிறங்கும் வாகனத்தின் ப்ரோடோடைப் பதிப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி 2020-களில் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்பட்டு வானில் பறக்கலாம்.

    ரோல்ஸ் ராய்ஸ் EVTOL விமானம் நான்கு அல்லது ஐந்து பேர் அமரக்கூடியதாகவும், 500 மைல் வரை பறக்கும் திறன், அதிகபட்சம் மணிக்கு 200 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும். 



    "சந்தையில் இதுபோன்ற பறக்கும் வாகனத்தை இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் பார்க்க முடியும். நாங்கள் எங்களது பறக்கும் வாகனத்தை இரண்டு ஆண்டுகளில் செயல்விளக்கம் தருவோம்," என ரோல்ஸ் ராய்ஸ் மின்னணு குழு தலைவர் ராப் வாட்சன் தெரிவித்திருக்கிறார்

    இந்த ஹைப்ரிட் வாகனத்தை உருவாக்க இதுவரை ஒற்றை இலக்க மில்லியன் பவுன்ட்கள் வரை செலவாகும் நிலையில், இவை வழக்கமான கேஸ் டர்பைன் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக்கல் சிஸ்டம் கொண்டிருக்கும். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்க ஆராய்ச்சி செய்வதாகவும் இது EVTOL மாடலை விட மேம்பட்டு இருக்காது என தெரிவித்திருக்கிறது.

    ரோல்ஸ் ராய்ஸ் மட்டுமின்றி உபெர், கிட்டி ஹாக், லிலியம் அவியேஷன், சஃப்ரான், ஹனிவெல் என பல்வேறு இதர நிறுவனங்களும் பறக்கும் திறன் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்ய ஆராய்ச்சி செய்கின்றன. #RollsRoyce #hybrid
    ×