search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "followers"

    • 100 கோடி பாலோயர்ஸ்களை கொண்ட முதல் நபர் என்ற பெருமை பெற்றார்.
    • கால்பந்து அரங்கில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்

    லிஸ்பன்:

    பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டொ (39), போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது அவர் சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து அரங்கில் அதிகாரப்பூர்வமாக 900 கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    சமூக வலைதளங்களில் அதிகம் ரசிகர்களைக் கொண்டுள்ள விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.

    எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதள பக்கத்திலும் கணக்கு வைத்துள்ள ரொனால்டோ, அண்மையில், UR. Cristiano எனும் யூடியூப் சேனலை தொடங்கினார். இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து வினாடிக்கு வினாடி சப்ஸ்கிரைபர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒரு வாரத்திற்குள் அவரை 5 கோடி பேர் பாலோ செய்கின்றனர்.

    இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில் சேர்ந்து 100 கோடி பாலோயர்ஸ் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.

    யூடியூபில் 5 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் சுமார் 64 கோடி பேரும், பேஸ்புக்கில் 17 கோடி பேரும், எக்ஸ் தளத்தில் சுமார் 11.3 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.

    இதைக் கொண்டாடும் விதமாக போர்ச்சுக்கல் கால்பந்து அணி புதிய போஸ்டரை வெளியிட்டது. ரசிகர்கள் இதனை உற்சாகமாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

    • மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது.
    • பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

    அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது. உலக அளவிலும் சொற்ப தலைவர்களுக்கே இந்த அளவிலான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

     

    பிரதமர் மோடி, கடந்த 2009 ஆம் ஆண்டு எக்ஸ்[ட்விட்டர்] தளத்தில் கணக்கை தொடங்கினார். இந்நிலையில் தற்போது 10 கோடி ஃபாலோயர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் உரிமையாளர் எலான் மஸ்க் மோடிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    மஸ்க் தனது எக்ஸ் பதிவில், உலகில் அதிகம்  பின்தொடரப்படும் தலைவர்களில் ஒருவராக ஆனதற்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மோடியை எக்ஸ் [ட்விட்டர்] தளத்தில் பின்தொடரும் கணக்குகளில் 60 சதவீதம் போலியானவை என்று சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    டுவிட்டர் நிறுவனத்தின் சீரமைப்பு நடவடிக்கையால் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை பின்தொடரும் அபிமானிகளின் எண்ணிக்கை இன்று வெகுவாக சரிந்தது. #Twittercleanup #Modiloses3lakhfollowers
    புதுடெல்லி:

    பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் பல நாடுகளை சேர்ந்த அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ‘ட்ரோல்’, ‘மீம்ஸ்’ என்ற போர்வையில் ஆபாசமான சித்தரிப்பும் செய்யப்படுகிறது.

    இதுபோன்ற கருத்துகளும், சித்தரிப்பும் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க அரசை தாக்கும் வகையில் அமைவதாக அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

    இது, உள்நாட்டு அரசியலுக்கு பாதகமாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதைதொடர்ந்து, சர்ச்சைக்குரியதும் பெரும்பாலானவர்களால் விரும்பத்தகாததுமான கருத்துகளை பதிவிடும் நபர்களின் கணக்குகளை முடக்க டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் தீர்மானித்தது.

    இதன் அடிப்படையில், தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும், முடக்கவும் அதிகமான நபர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

    இதன் விளைவாக, கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டது. 

    சிலவேளைகளில், ஒரே நாளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும், டுவிட்டரில் ஒரு பிரமுகரை பின்தொடர்ந்து, பின்னர் நிறுத்தி கொண்டவர்களின் கணக்குகளையும், முடக்கப்பட்ட கணக்குகளையும் நீக்கிவிட்டு சரியான எண்ணிக்கையிலான அபிமானிகளை குறிப்பிடும் சீரமைப்பு நடவடிக்கைகளையும் டுவிட்டர் மேற்கொண்டுள்ளது போலி கணக்குகள். 

    இந்த நடவடிக்கையின் விளைவாக பல நாடுகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், இதர துறைகளை சேர்ந்த நட்சத்திர அந்தஸ்தில் உள்ளவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் லட்சக்கணக்கான அபிமானிகளை  இழந்துள்ளனர்.

    குறிப்பாக, சமீபத்தில் வெளியான செய்தியின்படி டுவிட்டரில் 4 கோடியே 34 லட்சம் அபிமானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய அளவில் மூன்றாம் இடத்தில் இருந்தார். ஆனால், இன்று 2 லட்சத்து 84 ஆயிரத்து 746 அபிமானிகளை அவர் இழந்துள்ளார். இதேபோல் ராகுல் காந்தியும் சுமார்  17 ஆயிரம் அபிமானிகளை இழந்தார்.

    பிரதமர் மோடி அலுவலகத்தின் டுவிட்டர் பக்கமும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அபிமானிகளை இழந்தது. காங்கிரஸ் தலைவர் சசி தரூர் சுமார் ஒன்றரை லட்சம் பேரை இழந்துள்ளார்.  மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சுமார் 74 ஆயிரம் அபிமானிகளையும், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 91 ஆயிரத்து 555 அபிமானிகளையும், அமித் ஷா 33,363 அபிமானிகளையும் இழந்தனர்.

    இதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சுமார் 4 லட்சம் அபிமானிகளையும், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமார் 3 லட்சம் அபிமானிகளையும் இழந்துள்ளனர்.

    இதுமட்டுமின்றி, டுவிட்டர் சமூக வலைத்தளத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையிலும் 77 லட்சம் அபிமானிகளும், டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியான (சி.இ.ஓ.) ஜேக் டார்ஸே அபிமானிகளில் சுமார் 2 லட்சம் பேரும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Twittercleanup #Modiloses3lakhfollowers
    எதிர்க்கருத்து கூறுபவர்களை ப்ளாக் செய்யும் வசதி ட்விட்டரில் இருக்கும் நிலையில், டிரம்ப் அப்படி யாரையும் பிளாக் செய்ய கூடாது என அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Trump
    வாஷிங்டன்:

    ட்விட்டர் எனும் சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ட்விட்டரில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல் தலைவர்களில் டிரம்ப் முக்கிய இடம் வகிக்கிறார். 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிரம்பை பின்தொடர்ந்து வருகின்றனர்.

    காரசாரமான அரசியல் விமர்சனம், ஊடகங்களை கடுமையாக சாடுவது என தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து டிரம்ப் ஆக்டிவாக இருப்பவர். தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களை பிளாக் செய்வதும் வாடிக்கையான ஒன்றே. இதில், டிரம்பால் பிளாக் செய்யப்பட்ட 7 பேர் கோர்ட்டை நாடினர்.

    டிரம்ப் தங்களை பிளாக் செய்துள்ளதால், அவரது ட்விட்டர் பதிவை எங்களால் படிக்க முடியவில்லை என அவர்கள் அமெரிக்க பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணையில், பின்தொடர்பவர்களின் அரசியல் ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் தடை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதி, சமூகவலைதளங்களில் பொதுமக்களின் கருத்து அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றும், அதனை பிரதமரின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார்.

    மேலும், டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களை தடை செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. #Trump
    ×