search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "french citizenship"

    • பாலமுருகன் வீட்டிற்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழ் வந்தது.
    • போலீசார் வழக்கு பதிந்து மிலன் அருள்மணியை தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26) இவர் டிப்ளமோ கேட்ரிங் படித்து விட்டு,புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

    இவர் வேலைபார்க்கும் ஓட்டல் மூலம் அறிமுகமான புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த மிலன் அருள்மணி (46) என்பவர் பாலமுருகனுக்கு பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்றுதருவதாக கூறி அவரிடம் இருந்து முன்பணமாக ரூ.10 ஆயிரம் பெற்றார்.

    பின்னர் படிப்படியாக பள்ளி ஒரிஜினல் சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்ளுடன் மொத்தம் ரூ.1¼ லட்சம் பணத்தை கடந்த பிப்ரவரி மாதம் மிலன் அருள்மணி வாங்கினார்.

    அதனை அடுத்து பாலமுருகன் வீட்டிற்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழ் வந்தது. அந்த சான்றிதழை பாலமுருகன் எடுத்துக் கொண்டு சென்னையில் உள்ள வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூலம் சரிபார்த்தார். அப்போது அது போலி சான்றிதழ் என தெரியவந்தது. மிலன் அருள்மணி பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழை போலியாக தயாரித்து தபாலில் பாலமுருகனுக்கு அனுப்பியது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சிடைந்த பாலமுருகன் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மிலன் அருள்மணியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த மிலன் அருள்மணியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    மனைவி பிரிந்து சென்றதால் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஆசிரியர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வம்பா கீரப்பாளையம் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் பிணம் கரை ஒதுங்கி கிடந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒதியஞ்சாலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் உப்பளம் தமிழ்த்தாய் நகரை சேர்ந்த ஜாய் ஜூலியா (வயது 33) என்பதும், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர் பிரான்சு நாட்டில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரான்சில் இருந்து புதுவை திரும்பிய ஜாய் ஜூலியாவுக்கும், நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், சில நாட்களில் அந்த பெண் ஜாய் ஜூலியாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் ஜாய் ஜூலியா விரக்தியுடன் இருந்து வந்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த ஜாய் ஜூலியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×