search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha idols"

    • இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச்சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.
    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருச்சி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டத்திலும் பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாநகரில் 242 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 932 இடங்களிலும் என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 174 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.


    விநாயகர் சிலை கரைப்பதற்கு எடுத்து செல்லும் போது சிலை அமைப்பாளர்கள் மற்றும் சிலை அமைப்பு இயக்கத்தினர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    சிலை அமைப்பாளர்கள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும் விநாயகர் சிலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தனிப்பட்ட தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஊர்வலத்தின் போது ஒலிப்பெருக்கிகளின் சத்தம் குறிப்பிட்ட டெசிபலுக்கு மிகாமல் ஒலிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஊர்வலம் மாலை 3, 4 மணிக்குள் புறப்பட வேண்டும். இரவு 10 மணிக்குள் ஊர்வலத்தை கண்டிப்பாக முடித்துவிட வேண்டும்.

    ஊர்வலம் செல்லும் பாதையில் எந்தவொரு இடத்திலும், எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலத்தை இடைநிறுத்தம் செய்யாமல், விரைந்து நடத்தி சிலை கரைக்கும் இடம் சென்று சேர வேண்டும்.

    ஊர்வலத்தின் போது அமைப்பாளர்கள் அவர்களது குழுவினரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஊர்வலத்தில் அரசியல் கோஷங்கள், பிற மதத்தினரை புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

    மது அருந்தியவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை விழாக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு சிறு பிரச்னையும் இன்றி ஊர்வலம் செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.

    சிலைகளை கரைக்க கொண்டு செல்லும்போது நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.

    3 சக்கர வாகனம் மற்றும் மாட்டு வண்டிகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விசர்ஜன நிகழ்ச்சியில் பின்பற்ற வேண்டும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

    மேலும் விநாயகர் சிலை கரைக்கப்படும் திருச்சி காவிரி பாலத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இரவு 10 மணி வரை சிலைகள் கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், சிலை கரைக்கப்படும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலி, ஒளி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் பாலத்தின் கைப்பிடி சுவர் பகுதிக்கு சென்றுவிடாதபடி சவுக்கு மரங்களை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சிலை கரைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் பாலத்தின் கைப்பிடி சுவரை ஒட்டியவாறு மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வரும் வாகனத்தை மேடையின் அருகே திருப்பி நிறுத்தி, சிலையை அந்த மேடைக்கு மாற்றி, அங்கிருந்து காவிரி ஆற்றில் கரைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில், 3 காவல் துணை ஆணையர்கள், 1 கூடுதல் காவல் துணை ஆணையர், 8 காவல் உதவி ஆணையர்கள், 41 காவல் ஆய்வாளர்கள், 101 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 1700 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

    ஊர்வலத்தின்போது முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரச்சனைக்குரிய இடங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, அவ்விடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

    மேலும் விநாயகர் ஊர்வலத்தின்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறின்றி விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்காக, போக்குவரத்து வழித்தடங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலமானது அமைதியான முறையில் நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    திருச்சி புறநகர் மாவட்ட பகுதிகளில் நேற்று முதல் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று புத்தாநத்தம் இடையபட்டி விநாயகர் குளத்தில் 17 சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

    பதட்டமான பகுதிகளாக கருதப்படும் துவரங்குறிச்சி மற்றும் புத்தாநத்தம் ஆகிய போலீஸ் சரகத்துக்கு உட் பட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட உள்ளனர்.

    மேலும் ஊர்வலத்தில் பிரச்னை ஏற்படுத்தும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக புத்தாநத்தம் காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து புத்தாநத்தம் பஜார், ஜும்மா மசூதி வழியாக ஊர்வலமாக சென்று அந்தக் குளத்தில் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    இதையடுத்து அங்கே 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • வருகிற செப்டம்பர் 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி.
    • 12 அடி உயர சிலைகள் தயாரிக்க தற்போது அனுமதி இல்லை.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்று காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    சிலை தயாரிப்பு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகளில் தொழிலாளர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தெலுங்கு பாளையத்தில் விநாயகர் சிலைகளை தயாரித்து வரும் சக்திவேல் முருகன் என்பவர் கூறியதாவது:-

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் உள்ளிட்ட கலவைகளை கலந்து 2 அடி முதல் 10 அடி வரையிலான உயரம் மற்றும் அகலங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 12 அடி உயர சிலைகள் தயாரிக்க தற்போது அனுமதி இல்லை.

    எலியின் மீது விநாயகர் அமர்ந்து இருப்பது, டிராகன் வடிவ வாகனத்தில் விநாயகர், 2 மாடுகளை கொண்டு ஏர் கலப்பையுடன் உழவுப்பணியை மேற்கொள்ளும் விவசாயி வடிவம், நந்தி, மான், மயில், குதிரையில் அமர்ந்திருக்கும் விநாயகர், சிவன் சிலையை கையில் உயர்த்தி பிடித்திருக்கும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு ஒரு பக்கம் குபேரன், மறுபக்கம் லட்சுமி, நடுப்பகுதியில் விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற குபேர லட்சுமி விநாயகர் சிலை, சிங்கங்கள் பறப்பது போல விநாயகருடன் கூடிய சிலை, 6 கைகளுடன் கூடிய ரத்தின விநாயகர் சிலை, 5 முகம், மூன்று முகங்களுடன் கூடிய விநாயகர் சிலைகள் புதிய வரவாகும். மாசு ஏற்படுத்தாத வாட்டர் கலர் சிலைக்கு பூசப்படுகிறது.

    மூலப்பொருட்களின் விலை உயர்வால் தயாரிப்பு செலவும் உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டு விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்துள்ளது.

    அதிக உயர் கொண்ட சிலைகளின் விலை கடந்தாண்டை விட ரூ.500 முதல் ரூ.1500 வரை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சிலைக்கான ஆர்டர்கள் ஓரளவுக்கு வந்துள்ளன. சதுர்த்தி விழா நெருங்கும்போது விற்பனை மேலும் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு 2 அடி சிலை ரூ.1000, 3 அடி சிலை ரூ.2500, 4 அடி சிலை ரூ.4 ஆயிரம், 5 அடி சிலை ரூ.6500, 7 அடி சிலை ரூ.11 ஆயிரம், 8 அடி சிலை ரூ.18 ஆயிரம், 9 அடி சிலை ரூ.20 ஆயிரம், 10 அடி சிலை ரூ.27 ஆயிரம் முதல் விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • நேற்றும் இன்றும் கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.
    • சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

    சென்னை:

    சென்னையில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடந்த 18-ந்தேதி அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன.

    சென்னை மாநகர பகுதிகளில் 1,519 சிலைகளும் தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் 425 சிலைகளும், ஆவடி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 214 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த ஒரு வாரமாக பூஜை செய்யப்பட்டு வந்தது. இதன்மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2,148 சிலைகள் பூஜை செய்யப்பட்டு வந்தன.

    இந்த சிலைகளை நேற்றும் இன்றும் கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். இதற்காக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முதல் சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. முதல் நாளான நேற்று சுமார் ௩௦ சதவீதம் அளவுக்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இன்று 2-வது நாள் நடைபெற்ற ஊர்வலத்தில் சென்னை மாநகரில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. 2,148 சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.

    இந்த சிலைகளை கரைப்பதற்காக வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என தனித்தனியாக ஊர்வலம் பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழியாக மட்டுமே சிலைகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கபட்டிருந்தது. இதன்படி இன்று காலை முதலே விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பகலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருவல்லிக்கேணியில் இருந்து பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது.

    அதேபோன்று பாரத் இந்த முன்னணி அமைப்பின் சார்பில் சூளை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது விநாயகர் சிலைகள் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி கடலில் கரைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஊர்வலம் பாதைகள் முழுவதிலும் போலீசார் கண்காணித்து வந்தனர்.

    பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் சிலை களை கரைப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பட்டினப்பாக்கம் கடற்கரையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மேற்பார்வையில் பட்டினப்பாக்கத்தில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சிலைகளை கடலில் எடுத்துச் சென்று கரைப்பதற்கு ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    அதன் மூலமாக விநாயகர் சிலைகளை கடலுக்குள் தூக்கிச் சென்று கரைத்தனர். கண்காணிப்பு கோபுரங்களும் கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். ஊர்வலம் செல்லும் பாதைகளை யொட்டி உள்ள வழிபாட்டு தலங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    குறிப்பாக திருவல்லிக்கேணியில் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்படாத இடம் வழியாக இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்தப்படும். இந்த ஆண்டும் அது போன்று ஊர்வலம் நடத்தப்பட்டது.

    பின்னர் ஊர்வலத்தில் சென்றவர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பின்னர் 5-ம் நாள் விநாயகர் சிலை கள் ஊர்வலமாக எடுத்து சென்று பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் கோவில் காவிரி கரையில் உள்ள காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த வருட மும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 118 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. 5-ம் நாளான நேற்று மாலை வேலூரில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் கடைவீதி, காத்தாக்கண்டர் பிரிவு சாலையில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி ஒற்றுமை பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு பரமத்தி ஒன்றிய தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். பரமத்தி ஒன்றிய கேசவன் முன்னிலை வகித்தார். பரமத்தி ஒன்றிய ரமேஷ் வரவேற்றார். இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் எழுச்சியுரையாற்றினார். மாவட்ட பொதுச்செய லாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர்கள் சரவணன், ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    அதனை தொடர்ந்து பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமார் கொடியசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    கடைவீதி பகுதியில் இருந்து தொடங்கிய விநா யகர் விசர்ஜன ஊர்வலம் திருவள்ளுவர் சாலை, பழைய பை- பாஸ் சாலை, சந்தை பகுதி, பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோயில், பஸ்நிலையம், அண்ணா சாலை மற்றும் காவிரி சாலை வழியாக சென்று காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் நேற்று இரவு ஒவ்வொரு சிலையாக வரிசையாக கரைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • சிலைகளை அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு தொடங்கியது.
    • உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    உடுமலை:

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18 ம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி,இந்து சாம்ராஜ்ய மக்கள் இயக்கம், இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) மற்றும் பொதுமக்கள் சார்பில் 318 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை செய்தும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் வந்தனர்.

    அதைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சிலைகளை அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு தொடங்கியது.

    செண்டை வாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் கல்பனா சாலை,கச்சேரி வீதி,பெரிய கடை வீதி, பழனி ரோடு வழியாக ஊர்வலம் அமராவதி ஆற்றை நோக்கி சென்றது. ஊர்வலத்தையொட்டி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    போலீசார் முன்னே செல்ல ஊர்வலம் அதைத் தொடர்ந்து சென்றது. ஊர்வலதை யொட்டி உடுமலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதியில் பிரதிஷ்டை செய்த சிலைகளை தவிர மற்ற விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வு நேற்றுடன் முடிவடைந்தது.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • 20 அடி உயரமுள்ள சிலை வைக்கப்பட்ட டிராக்டர் வாகனத்தை ஓட்டினார்.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி பெரிய காலாப்பட்டு செல்லியம்மன் நகரில் விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் 20 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

    18-ந் தேதி தொடங்கி சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் செய்யப்பட்டது. தினமும் ஆன்மீக சொற்பொழிவு பெண்க ளுக்கு கோல போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    இந்த ஒருங்கிணைப்பு குழு சார்பில், நெசல், கொடூர், வில்வநத்தம், சின்ன காலப்பட்டு, பிள்ளை சாவடி, தலகாணிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தனர்.

    இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி 3-ம் நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வமாக எடுத்துவரப்பட்ட விநாயகர் சிலைகள் செல்லியம்மன் நகரில் ஒன்றிணைந்தது. பெரிய விநாயகர் முன்பு செல்ல மற்ற ஊர்களில் இருந்து வந்த விநாயகர் அனைத்தும் பேரணியாக வாகனங்களில் வந்தது.

    விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவையின் பொருளாளர் கண்ணன் தலைமையில் நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். அவர் 20 அடி உயரமுள்ள சிலை வைக்கப்பட்ட டிராக்டர் வாகனத்தை ஓட்டினார்.

    பேரணியாக வந்த விநாயகர் சிலைகள் பங்களா வீதி வழியாக புதுவை காலாப்பட்டு கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அனைத்து சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

    20 அடி உயரமுள்ள விநாயக சிலை தத்ரூபவமாக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வகையில் கிரேன் மூலம் கடலில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவை நிர்வாகிகளும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்
    • கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதை யொட்டி மாவட்டத்தில் திருநகர், பெ ரியபேட் , ஒப்பிலார் மணியர் கோவில் வீதி, கோவில்பத்து, நே ருநகர், கோட்டுச்சேரி, தருமபுரம், மதகடி, ஏழை மாரியம்மன் கோவில் மற்றும் பொதுஇடங்களில் 54 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. காரைக்கால் சக்தி விநாயகர் கமிட்டி மற்றும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை சிறப்பு பூஜைக்கு பிறகு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் இந்து முன்னணி பொது செயலர் விஜயன், மாவட்ட தலைவர் கணேஷ், நகர தலைவர் ராஜ்குமார், பா.ஜ.க. மாநில துணை தலைவர் அருள்முருகன், மாவட்ட தலைவர் சேனாதிபதி, முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் மற்றும் சக்தி விநாயகர் விழா கமிட்டி நிர்வாகிகள் உள்பட திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக கிளிஞ்சல்மேடு கடற்கரைக்கு சென்றது.

    அங்கு கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    • காட்டேரிக்குப்பத்தில் 12 அடி, வில்லியனூரில் 10 அடி உயர விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • இளைஞர்கள் சங்கங்கள் சார்பில் 100 க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று உற்சாகமாக கொண்டா டப்பட்டது.

    இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் புதுவை முழுவதும் 150 இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகர் சிலைக்கு நேற்று மாலை பூஜை செய்யப்பட்டது.

    விழா பேரவை தலைவர் குமரகுரு தலைமை வகித்தார். முன்னாள்

    எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வரவேற்றார். இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம்,

    எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கரன், பா.ஜனதா தலைவர் சாமிநாதன், விழா பேரவை பொதுச் செயலாளர் சனில்குமார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    காலாப்பட்டில் 19 அடி, பெரியார் நகர், வைத்திக்குப்பத்தில் 14 அடி, கோரிமேடு, காட்டேரிக்குப்பத்தில் 12 அடி, வில்லியனூரில் 10 அடி உயர விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    புதுவை நகர், புறநகர் பகுதியில் 5 அடி முதல் 21 அடி வரை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதுதவிர ஆங்காங்கே குடியிருப்போர், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஒட்டுனர்கள், இளைஞர்கள் சங்கங்கள் சார்பில் 100 க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளது.

    புதுவையில் பல்வேறு பகுதி களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை 3 இடங்களில் விஜர்சனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் சிலைகள் நாளை (20-ந் தேதி) காலாப்பட்டு, நல்லவாடு ஆகிய கடற்கரை பகுதிகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    2-ம் கட்டமாக நகரப்பகுதி முழுவதும் உள்ள சிலைகள் வருகிற 22-ந் தேதி கடற்கரை சாலையில் விஜர்சனம் செய்யப்படுகிறது. 22-ந் தேதி மதியம் நகர பகுதியில் உள்ள சிலைகள் அனைத்தும் சாரம் அவ்வை திடலுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து நேருவீதி, காந்திவீதி, படேல் சாலை வழியாக கடற்கரை சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்படுகிறது.

    • விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
    • பெரியவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட வண்ண வண்ண விநாயகர் சிலையை வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் பெரியவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட வண்ண வண்ண விநாயகர் சிலையை வாங்கி சென்றனர். மேலும் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட பூஜை பொருட்கள், பழ வகைகள், அவல்,பொறி, எருக்கம் பூ மாலை அருகம்புல் மாலை போன்றவற்றை ஆர்வமாக வாங்கி சென்றனர்.இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு விநாயகர் சிலையை கொண்டு சென்று அபிஷேகம் செய்து மற்றும் தீபாராதனை காண்பித்து கொழுக்கட்டை, நாவல் பழம் போன்றவற்றை படைத்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் 1300 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதி கோரினர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், தமிழக அரசின் விதிகளுக்கு உட்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினார்.அதன்படி, விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்த பல்வேறு பதிகளை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.மேலும், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடும் இடங்களில் விழா குழுவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து போலீசார் அனுமதியுடன் 3 அல்லது 5-ம் நாள் விநாயகர் சிலையை அரசு அனுமதி வழங்கிய இடத்தில் கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    • ரூ.100 முதல் விற்பனைக்கு வைத்துள்ளனர்
    • 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு

    வேலூர்:

    இந்துக்களின் முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. களிமண்ணால் செய்யபட்ட விநாயகர் சிலைகள் ரூ.100 முதல் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலை, குடைகள், வேர்க்கடலை, சோளம், கம்பு, வாழை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்ட தொடங்கிவிட்டது.

    வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னனி சார்பில் மட்டுமே 1500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. வேலூர் மாநகரில் மட்டுமே 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி இன்று அதிகாலை முதல் முழு முதற்கடவுளான விநாயகர் பெருமானுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. விநாயகருக்கு உகந்த பொருளான அருகம்புல், எருக்கன் பூ மாலை, கம்பு, சோளம், நவதானியம், கொழுக்கட்டை மற்றும் பழங்களை படையலிட்டு வழிபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடைவீதிகளில் களிமண் விநாயகர் சிலைகள், அருகம்புல், எருக்கன்பூ மாலை, குடை மற்றும் பழ வகைகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை மாவட் டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 1,200 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    இதையடுத்து விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணி 3-ம் நாளான நாளை மறுதினம் 20-ந் தேதி முதல் நடைபெற உள்ளன. இதற்காக 7 நீர் நிலைகள் தேர்வு செய்யப்பட்டு சிலைகள் கரைக்கப்பட உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் 749 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையிலான 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை மறுநாள் 20-ந் தேதி வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளும், அன்றைய மறுநாள் 21-ந் தேதி ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

    வாணியம்பாடி பள்ளிப்பட்டு ஏரி, ஆம்பூர் ஆணை மடுகு தடுப்பணை, திருப்பத்தூர் ஆதியூர்ஏரி, நாட்ரம்பள்ளி கல்லுகுட்டை ஏரி ஆகிய 4 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட ராணிப்பேட்டை உட்கோட்டத்தில் 252 இடங்களிலும், அரக்கோணம் உட்கோட்டத்தில் 211 இடங்களில் என மொத்தம் 463 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி தலைமையான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • புறநகர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.

    புதுவையிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் சாரம் அவ்வை திடலில் 21 அடி உயரத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை இன்று மாலை 6 மணிக்கு பூஜை செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்ப டுகிறது.

    காலாப்பட்டில் 19 அடி உயரத்திலும், பெரியார் நகர், வைத்திக்குப்பத்தில் 14 அடி உயரத்திலும், கோரிமேடு, காட்டே ரிக்குப்பம் பகுதிகளில் 12 அடி உயரத்திலும், வில்லியனூரில் 10 அடி உயரத்திலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் படுகிறது.

    இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழா பேரவையின் அனுமதியோடு புதுவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    இதுதவிர லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, ரெட்டிபார்பாளையம், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை உட்பட புதுவை நகர், புறநகர் பகுதிகளில் 5 அடி முதல் 21 அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    பல்வேறு ஆட்டோ, கனரக வாகன தொழிலாளர் சங்கங்கள், சமூக அமைப்புகள், இளைஞர் நல அமைப்புகள், பொதுநல அமைப்புகள், குடியிருப்போர் சங்கங்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    புதுவையின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கடலில் விஜர்சனம் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கிராமப்புறங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் வருகிற 20-ந் தேதி காலாப்பட்டு மற்றும் நல்லவாடு கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது. 2-ம் கட்டமாக நகர்ப்புறங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் 22-ந் தேதி கடற்கரை சாலையில் 3 கிரேன் மூலம் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர், புறநகர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சேலம்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து வழிபாடு நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி சிலைகள் வைப்பதற்கான அனுமதியை பெற பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்தை நாடினர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்காக பந்தல், மின் விளக்குகள் அலங்காரம், ரேடியோ செட் ஆகியவை அமைத்துள்ளனர். பந்தலில் வாழைதார்கள் , பூக்கள் அலங்காரம், ஒவ்வொரு நாளும் பூைஜ செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    1915 ஆயிரம் விநாயகர் சிலைகள்

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் 1,915 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் சேலம் புறநகர் பகுதியில் உள்ள ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி ஆகிய 5 போலீஸ் உட்கோட்டத்தில் மட்டும் 1050 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் சேலம் மாநகரில் மட்டும் 865 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று இரவு அந்த இடங்கயில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுதவிர இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது.

    3,200 போலீசார் குவிப்பு

    இதற்காக சேலம் புறநகர் பகுதியில் 2000 போலீசாரும், மாநகர் பகுதியில் 1200 போலீசாரும் என மொத்தம் 3,200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிலை வைக்கப்படும் இடங்களில் இன்று காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரோந்து போலீசாரும் இந்த இடங்களில் அவ்வப்போது வாகனங்களில் சென்று கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் வீதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    16 இடங்களில் கரைக்க முடிவு

    விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைத்திட வேண்டும் என சேலம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் சேலம் மாநகர எல்லைக்குட்பட்டவர்கள் மூக்கனேரியில் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும். மேலும் சேலம் ஊரக பகுதிகளான சங்ககிரி உட்கோட்டம், தேவூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் கல்வடங்கம் பகுதியிலும், பூலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் சந்தைபேட்டை, பில்லுக்குறிச்சி, கோம்பைக்காடு ஆகிய பகுதிகளிலும், ஆத்தூர் உட்கோட்டம், தம்மம்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் ஜங்கமசமுத்திரம், செந்தாரப்பட்டி ஏரியிலும், ஆத்தூர் ஊரகம் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் முட்டல் ஏரி மற்றும் ஒட்டம்பாறை ஏரியிலும் சிலைகளை கரைத்திட வேண்டும்.

    மேட்டூர் உட்கோட்டம் மேட்டூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் காவேரி பாலம் பகுதியிலும், கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் சென்றாய பெருமாள் கோவில் பகுதியிலும், கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் திப்பம்பட்டியிலும், மேச்சேரி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் கூனாண்டியூர், கீரைக்காரனூரிலும் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும்

    ஓமலூர் உட்கோட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் டேனீஷ்பேட்டை ஏரியிலும், வாழப்பாடி உட்கோட்டம, வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் ஆணைமடுவு அணை பகுதியிலும், கருமந்துறை போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் மணியார்குண்டம் ஏரியிலும் சிலைகளை கரைத்திட நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தவிர பிற இடங்களில் சிலைகளை கரைப்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ×