search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganja Seizure"

    • போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • 62 பண்டல்களை கொண்ட 124 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த குன்றக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீஸ்காரர் ஜெயராஜ் ஆகியோர் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணி சென்றனர்.

    திட்டுமலை காளி கோவில் சென்றபோது அங்கு நின்றிருந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை அய்யனார் கோவில் செல்லும் பாதையில் ஓட்டி சென்றனர்.

    தொடர்ந்து அவர்களை விரட்டி சென்றபோது வாகனம் செல்ல பாதை இல்லாததால் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அந்த வாகனத்தை கைப்பற்றிய போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் பாதரக்குடி அய்ய னார் கோவில் செல்லும் மண் ரோட்டில் தண்ணீர் வழித்தடத்தில் உள்ள சிறிய பாலத்தின் அடியில் பதுக்கி வைத்து இருந்த 2 கிலோ எடையுள்ள, 62 பண்டல்களை கொண்ட 124 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

    பின்னர் ஏற்கனவே சந்தேகத்திற்கிடமாக நின்றி ருந்த வாகனம் குறித்து மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் திருச்சி மாநகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று இரவு திருச்சி சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் சோதனை நடந்தது.

    இதில ஆந்திரா மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த ஆந்திரா மாநிலம் மக்காவரப்பள்ளம் ஜி நகரம் துர்கா ராவ், அல்லூர் அண்ணாவாடு காலனி சித்தம்பள்ளி சண்டிபாபு, கிழக்கு கோதாவரி வெக்கவ ரம் அபிலேஷ் வர்மா, கிருஷ்ணலங்கா விஜயவாடா சுபாஷ், விசாகப்பட்டினம் பக்கனபாலம் வித்யாசாகர் ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமி ருந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனம் உள்பட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றி குன்றக்குடி போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பிடிபட்டவர்களில் வித்யாசாகர் என்பவரின் தந்தை ஆந்திர மாநில காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Untitled-3: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி பகுதியில் ராசிபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சிவா மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அரசு கல்லூரி அருகே ஒரு சொகுசு கார் மற்றும் மோட்டார

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி பகுதியில் ராசிபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சிவா மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அரசு கல்லூரி அருகே ஒரு சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.

    அவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே விருப்பாச்சி நகரை சேர்ந்த சதீஷ் என்கிற கந்தசாமி (30), ஜெக்கேரியை சேர்ந்த முருகேசன் (46), ராசிபுரம் கத்தநாச்சம்பட்டியை சேர்ந்த தினேஷ் (29), அண்ணாநகர் காலனியை சேர்ந்த கார்த்தி (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் ஓசூர் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 50 கிலோ எடையுள்ள ரூ.10 லட்சம் மதிப்பு கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து இதுகுறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, ராசிபுரம் டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் கூறுகையில், கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 83 வழக்குகள் பதிவு செய்து 114 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 124 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக 19 குற்றவாளிகளின் வங்கி கணக்கில் உள்ள ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 666 முடக்கப்பட்டு உள்ளது. அவர்களது சொத்துக்கள் முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    ×