search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt Maternity Hospital"

    • ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதாக தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் தெரிவித்தன.
    • கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் உயர்ரக சிகிச்சை பெறுகின்றனர்.

    ராஜபாளையம்

    அரசு மகப்பேறு மருத்து வமனையில் தர மதிப்பீடு செய்வதற்காக தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் இரு நாட்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசு சார்பில் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் மகப்பேறு சிகிச்சை யின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட லக்சயா திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து நேஷனல் ஹெல்த் அத்தாரிட்டி சார்பில் தேசிய தர சான்றிதழ் வழங்கப்படு கிறது.

    இந்த ஆய்வு குறித்து தேசிய தர மதிப்பீட்டு குழு வினர்களான டாக்டர்கள் பரீத் உத்தின், ஜேயெஸ் பட்டேல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையமாக மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுவட்டார கிரா மப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் உயர்ரக சிகிச்சை பெறுகின்றனர்.

    ஆய்வு முடிவில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறந்த மதிப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆய்வு நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×