search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt. Schemes"

    • மண் காப்போம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவில் விரிவாக விளக்குகிறார் TNAU ஏ.வி. ஞானசம்பந்தம்.
    • அனைவரையும் தொழிலதிபர்களாக்கும் நோக்கத்தோடு இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.

    முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் கனவுகள் காண்பதும், இலக்குகள் நிர்ணயிப்பதும் இயல்பு.

    அந்த வகையில் மக்களின் வேளாண் சார்ந்த தொழில் கனவுகள் நிறைவேற ஓர் அற்புத களத்தை உருவாக்கியுள்ளது ஈஷா மண் காப்போம் இயக்கம்.

    இவ்வியக்கம் சார்பில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று கோவையில் "அக்ரி ஸ்டார்ட்-அப்" திருவிழா நடைபெறுகிறது.

    புதிதாக வேளாண் சார்ந்த தொழில் தொடங்குபவர்களுக்கு தாங்கள் துவங்கப் போகும் தொழில் சார்ந்த தெளிவான பார்வை இருந்தாலும் கூட அதை நடைமுறைப் படுத்தும் போது பல சந்தேகங்கள் எழும்.

    ஒரு தொழிலை முறையாக எப்படி பதிவு செய்வது என்பது தொடங்கி அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரையில் இருக்கும் அரசு நடைமுறைகள் மற்றும் அதற்கு ஆதரவாக இருக்கும் அரசுத் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து பல கேள்விகளும், சந்தேகங்களும் இருக்கும்.

    இது அனைத்திற்கும் தீர்வளிக்கும் வகையில் TNAU தொழில் நுட்ப வணிக காப்பகத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலர் அலுவலர் திரு.ஏ.வி. ஞான சம்பந்தம் அவர்கள் "வேளாணில் வணிக வாய்ப்புகள்" என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார்.

    இதில் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்குவோருக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து பேச உள்ளார். TNAU வில் செயல்படும் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் மூலம் வேளாண் சார் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

    வேளாண் சார் தொழில்களுக்கு அத்தியாவசியமான தொழிநுட்ப வழிகாட்டுதல்கள், வணிக மேலாண்மை பயிற்சிகள், சந்தை வாய்ப்புகள், தேசிய அளவிலான கண்காட்சிகள், வங்கி மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைப்பு ஆகிய பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.

    ஞான சம்பந்தம் இத்திட்டங்கள் குறித்தும் இவற்றை எப்படி பெறுவது என்பது குறித்தும் விரிவான தகவல்களை இந்த அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழாவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

    விவசாயிகள் மற்றும் வேளாண் சார் தொழில் துவங்க நினைக்கும் இளைஞர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவரையும் தொழிலதிபர்களாக்கும் நோக்கத்தோடு இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.

    இதில் விவசாயியாக இருந்து தொழில் முனைவோராக ஜெயித்த பல முன்னனி தொழிலதிபர்கள், சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்கிறார்கள். மேலும் விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டுவது எப்படி, அதை பேக் மற்றும் பிராண்டிங் செய்வது, மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதி என அனைத்து அம்சங்களிலிலும் வழிகாட்ட வேளாண் வல்லுநர்கள் வருகை தருகிறார்கள்.

    இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெற திருப்பூர் சப்-கலெக்டர் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.

    திருப்பூர், ஏப்.20-

    தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயி கள்இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்தி ட்டம் செயல்படுத்த ப்பட்டு வருகிறது. இதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் (AGRI STACK) மூலமாக அரசின்நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வருவாய் கோட்ட த்தில் உள்ள விவசாயிகளின் விவரங்களை ஒற்றை சாளர முறையில் பதிவு செய்வதால், வெவ்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவண ங்களை சமர்ப்பிக்காமல் எளிதில் விவசாயிகள் விண்ணப்பி க்கும் வகையில் கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆவணங்களுடன் தங்களது கிராம நிர்வாக அலுவலர்-உதவி வேளாண்மை அலுவலர்- உதவிதோட்டக்கலை அலுவலர்களை அணுகி கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துபயன் பெற திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார். கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆவணங்கள்ஆதார் அடையாள அட்டை, அலைபேசி எண், புகைப்படம் , வங்கி கணக்கு விபரம் , நில விபரங்கள் ஆகும்.

    ×