search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grand"

    • 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது.
    • இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மாபெரும் பொருட் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான கங்குவா படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்தது.

    இதற்கிடையில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸை ஒட்டி  கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முன்னதாக படத்தில் பணியாற்றியவர்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தில் பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேகா படம் பார்த்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

     

    அந்த பதிவில் அவர் கூறியதாவது, 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சத்யாவித்யாலயா சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்று நட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யாவித்யாலயா சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளியில் மருத்துவர்கள் தினவிழா மற்றும் பட்டய கணக்காளர் தினவிழா, மரம்நடுவிழா என்ற முப்பெரும் விழாக்கள் நடந்தன.

    பள்ளி சேர்மன் குமரேசன், மருத்துவர் சித்ரா குமரேசன், முதன்மை செயல் அலுவலர் அரவிந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். இண்ட்ராக்ட் கிளப் தலைவி வைஷ்ணவி வரவேற்றார்.

    துளி பவுண்டேசன் துணைத் தலைவர் ஸ்ரீராம், நிலத்தடி நீர் சேமிப்பு பற்றி பேசினார். செல்வராஜ், முத்து,

    சுப்பிரமணியன், அப்துல்காதர், முருகன், திருநாவுக்கரசு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி சங்கத்தலைவர் அங்குராஜ். செயலாளர் பால்சாமி, ராஜபாளையம் ரோட்டரி சங்கத்தலைவர் வைமாதிருப்பதி செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவி சுதர்சனா மருத்துவர்கள் பற்றி சிறப்புரையாற்றினார்.

    பள்ளி மாணவர்கள் ரெட்டியப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இண்டர்கிளப் செயலாளர் மாணவி ஹரிணி நன்றி கூறினார். பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்று நட்டனர்.

    ×