search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gurupujai"

    • பதிகம் பாடிய சுந்தரருக்கு, குரு பூஜை விழா.
    • சுந்தரருடனே சிவபாதம் அடைந்தவர் சேரமான் பெருமான் நாயனார்.

    சைவ சமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், திருமணம் செய்ய முயன்ற போது, சிவபெருமான் கிழவன் வேடம் தரித்து சென்று, அதை தடுத்தார். சுந்தரரின் பிறவி நோக்கம், இறைவனை புகழ்ந்து பாடுவது என்பதை உணர்த்தி, சிவபெருமான் அவ்வாறு தடுத்தாட்கொண்டார்.

    அதன்பின், பல கோவில்களுக்கு சென்று, சிவபெருமானை பாடியுள்ளார். திருமணத்தை தடுத்த சிவபெருமானே, இரண்டு பெண்களை சுந்தரரருக்கு திருமணம் செய்து வைத்தார். பன்னிரு திருமுறைகள் மற்றும் தேவாரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

    சிவபெருமான் மீது, பண்களுடன் 38 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். திருப்பூர், திருமுருகண்டி பூண்டியில் சுந்தரர் தங்கியிருந்த போது, சிவபெருமான், பூத கணங்களை அனுப்பி, பொருட்களை கவர செய்து, திருவிளையாடல் புரிந்தார்.

    அப்போது, வெஞ்சிலை வடுக வேடுவர் எனும் பதிகம் பாடியதால், அகம் மகிழ்ந்த இறைவன், சுந்தரரின் பாடலுக்காக, கவர்ந்த பொருட்களை கோவில் முன் குவித்தார்.

    சிவாலயங்கள் தோறும் பதிகம் பாடிய சுந்தரருக்கு, குரு பூஜை விழா, திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்த சாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நடக்கும். பல்வேறு திரவியங்களில் அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

    வெள்ளை யானை வாகனத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு, அருள்பாலித்தார்.

    சுந்தரமூர்த்தி நாயனாரிடம் நட்பு கொண்டு, அவருடனே பல கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்கியவர்; சுந்தரருடனே சிவபாதம் அடைந்தவர், கழறிற்றறிவார் நாயனார் எனப்படும் சேரமான் பெருமான் நாயனார்.

    அரசராக இருந்தாலும், சிவதொண்டையே பெரும் பாக்கியமாக கருதி, சுந்தரரோடு கயிலாயம் அடைந்த சேரமான் பெருமாள், குரு பூஜையும் இன்று.

    • காளையார் கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்து வருகிறது.
    • அரசியல் கட்சியினர் மரியாதை-2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    காளையார்கோவில்

    சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். பின்னர் அவர்களது கடைசி ஆசை யின்படி மருது சகோத ரர்களின் உடல்கள் காளை யார்கோவிலில் உள்ள சொர்ண காளீஸ் வரர் கோவில் முன்பு அடக்கம் செய்யப்பட்டது. மருது சகோதரர்களின் தியா கத்தை போற்றிடும் வகை யில் ஆண்டுதோறும் அக். 27-ந்தேதி மருது பாண்டி யர்கள் குருபூஜை விழா காளையார்கோவிலில் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான 222-வது குருபூஜை விழா வருகிற 27-ந்தேதி (வௌ்ளிக் கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் மருது பாண்டியர் நினைவிடத்தில் சிறப்பு தியாக பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் நினைவிடம் முன்பு பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தி யும் வழிபாடு நடத்துவார்கள்.

    அதன்பின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்வேறு சமுதாய அமைப் பினர், பொதுமக்கள் மருது பாண்டியனர் நினை விடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்து வார்கள். குரு பூஜை விழா வில் ராமநாதபுரம், சிவ கங்கை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ள காளை யார்கோவிலுக்கு வரு வார்கள்.

    இதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    முக்கிய வழித்தடங்க ளான திருப்புவனம், சிவ கங்கை, கல்லல், இளை யான்குடி, காளையார் கோவில் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடி அமைக் கப்பட்டு கண்காணிப்பு காமிராவும் பொருத்தப் பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத் தப்பட உள்ளனர். குருபூஜை விழாவிற்கு வருவோர் அரசு விதித்துள்ள கட்டுப் பாடுகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். வாகனங்ளில் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது. கோஷங்கள் போடக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.

    மருதுபாண்டியர் குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×