என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "HAVY RAIN"
- ஜெயங்கொண்டம் அருகே பெய்த தொடர் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்
- மேலும் சாலையின் இரண்டு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதுடன், சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தார்ச் சாலை அமைத்து தர கோரிக்கை எழுந்துள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் வடக்குத் தெருவில் சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள சிமெண்ட் சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலையில் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
மேலும் இதனால் சில வீடுகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து இரவில் தூங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
தேங்கி நிற்கும் மழை நீரால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
அவ்வழியாக குடியிருப்பு வாசிகள், பாதசாரிகள், இருசக்கர வாகனம், ஆடு, மாடுகள் உள்ளிட்டவைகள் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் ஓதம் காத்து வீட்டில் படுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்து மருத்துவமனை சென்று திரும்பிய சம்பவமும் நடந்துள்ளது.
மேலும் இதனால் அப்பகுதியில் குடியிருப்பு வாசிகளுக்கு அதிவிரைவில் நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதால் அந்த மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்தி சாலையில் சரலை மண் கொட்டி மேடாக்கி சாலையை உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் சாலையின் இரண்டு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதுடன், சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தார்ச் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிக்கத்தம்பூரில் கனமழை கொட்டி தீர்த்தது
- கனமழையாக இரவு வரை நீடித்தது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் சிக்கத்தம்பூர் ஊராட்சியில் நேற்றிரவு கன மழை பொழிந்தது. நேற்று காலையில் சுட்டெரித்த வெயில் மாலை வேளையில் குளிர்காற்றுடன், இடி மின்னலுடன் மழை பொழிய ஆரம்பித்தது. லேசான தூறலுடன் ஆரம்பித்து கனமழையாக இரவு வரை நீடித்தது.
சிக்கத்தம்பூரை அடுத்துள்ள சேர்வைராயன்குட்டை பகுதியில் பெய்த கன மழையால், குட்டை நிரம்பி வழிந்து, தண்ணீர் சிக்கத்தம்பூர் சாலைகளில் ஆறாக ஓடியது. இரு சக்கர வாகனங்கள், கார்கள் தண்ணீரில் தத்தளித்த படியே சென்றன. சிக்கத்தம்பூர் ஊராட்சி தலைவர் சசிகலாகார்த்திக், முன்னெச்செரிக்கையாக சாலையோரத்தில் உள்ள வடிகால் வாய்க்கால்களை பொக்லைன் மூலம் தூர்வாரியிருந்ததால், சாலைகளில் வந்த தண்ணீரின் நீரோட்டம் குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் , பாதிப்பின்றி சென்றது.இருப்பினும், கனமழை, நீரோட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நள்ளிரவு வரை போக்குவரத்து, பாதுகாப்பு பணியிணில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்