search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hajj pilgrims"

    • இந்த ஆண்டும் யாத்ரீகர்கள் வருகையால் மெக்கா நகரம் நிரம்பி வழிகிறது.
    • மெக்காவில் கடும் வெப்ப அலை வீசி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக கூறியுள்ளார்.

    மெக்கா:

    முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

    ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டும் யாத்ரீகர்கள் வருகையால் மெக்கா நகரம் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்களில் 645 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள், 60 பேர் ஜோர்டானியர்கள், 68 பேர் இந்தியர்கள் என்று சவுதி நாட்டு தூதர் தெரிவித்துள்ளார். மெக்காவில் கடும் வெப்ப அலை வீசி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக கூறியுள்ளார்.

    • மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது.
    • வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மெக்கா:

    முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

    ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட 550 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் எகிப்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த திங்களன்று மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸை எட்டியதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
    • பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மெக்கா:

    முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

    ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர் மற்றும் ஈரானைச் சேர்ந்த 5 என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் புனிதப் பயணம் வந்துள்ள 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாரதாரத்துறை அமைச்சர், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் பங்கேற்கும் வருடாந்திர புனித யாத்திரையின் போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியுள்ளது.

    • மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது.
    • பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இருந்து 4,200 பாலஸ்தீனியர்கள் சவூதி அரேபியா சென்றுள்ளனர்.

    மெக்கா:

    முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

    ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சம் பேர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இதுகுறித்து சவூதி அரேபிய அதிகாரிகள் கூறும்போது, கடந்த 11-ந்தேதி வரை 15 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு 18 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டனர். அதைவிட இந்த ஆண்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். புனித யாத்திரை நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது என்றனர்.

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின்ஹமாஸ் அமைப்புக்கு இடையே 8 மாதங்களாக நீடித்து வரும் போர் காரணமாக, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள முடியவில்லை. அதேவேளையில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இருந்து 4,200 பாலஸ்தீனியர்கள் சவூதி அரேபியா சென்றுள்ளனர்.

    • இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது.
    • வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்.

    ரியாத்:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அனைத்து நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதித்தன. சவுதி அரேபியா அரசும் ஹஜ் பயணிகளின் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

    கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த பிறகு ஹஜ் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து குறைந்த அளவிலேயே ஹஜ் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா காலங்களில் ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் தவுபிக் அல் ரபியா கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது. கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு இருந்த நிலை மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

    வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    கொரோனா காலங்களில் ஹஜ் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் சவுதி அரேபியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரையின் முதல் குழு இன்று புறப்பட்டது. அவர்களை மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி வழியனுப்பி வைத்தார். #HajjPilgrims
    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரது கடமைகளில் ஒன்றாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கான முதல் குழு டெல்லியில் இருந்து இன்று கிளம்பியது. அவர்களை மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் டெல்லியின் போக்குவரத்துத்துறை மந்திரி கைலாஷ் கெலாட், இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் சவுத்ரி மெஹ்பூப் அலி கைஸெர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    இந்த வருட யாத்திரைக்கு டெல்லியில் இருந்து இன்று 1200 யாத்ரீகர்கள் இன்று புறப்பட்டு செல்கின்றனர். இந்த குழுவில் டெல்லி மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் யாத்ரீகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த வருடம் 1,75,025 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதாகவும், சுமார் 47 சதவிகித பெண்கள் எவருடைய துணையும் இன்றி இந்த வருடம் யாத்திரை மேற்கொள்ள இருப்பதாகவும் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #HajjPilgrims
    ×