search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "House plot"

    • வழக்கில் சிலர் விடுவிக்கப்பட்டும், வழக்கு ரத்து செய்யப்பட்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
    • குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 30ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு 2008-ஆம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுர அடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுர அடி கொண்ட வீட்டுமனைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

    இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, ஜாபர் சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, ராஜமாணிக்கம், துர்கா, சங்கர் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2013-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் சிலர் விடுவிக்கப்பட்டும், வழக்கு ரத்து செய்யப்பட்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 30ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.

    • உதவி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
    • பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்

    ஆரணி:

    ஆரணி அருகே மட்டதாரி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பிரேம்குமார் என்பவர் பதவி வகித்து வருகின்றார்.

    இந்த கிராமத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் மேம்பாடு பிரிவின் கீழ் ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளன.

    ஆனால் ஆதிதிராவிடர்களுக்கு பலபேருக்கு இலவச வீட்டுமனை வரவில்லை எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளன. இதனையடுத்து ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு முகாமில் மட்டதாரி கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தகுதியுள்ள நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

    இந்த மனுவில் கூறியதாவது:-

    மட்டதாரி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று ள்ளதாகவும் ஏற்கனவே வீடு இருப்பவர்களுக்கும் அரசு பணியில் உள்ளவர்களுக்கும் வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளன.

    தகுதி உள்ள நபர்களை வருவாய் துறையினர் விசாரணை செய்து மீண்டும் வீட்டுமனை பட்டா வழங்க கோரி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேவராஜி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி, அம்மையப்பன் நகர் ஊராட்சியில் பல வருடங்களாக வீட்டு மனையின்றி 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இதனால் இங்குள்ள பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டாவுடன், இலவச வீடும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதவன், ஜமுனா இளவரசன் ஆகியோர் மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன் மற்றும் ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.

    மேலும் கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய குழு தலைவர் ஆகியோர் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜியிடம் பல வருடங்களாக கட்டேரி, அம்மையப்பன் நகர் ஊராட்சியில் வீட்டுமனை இன்றி அரசு புறம்போக்கு இடத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து எம்எல்ஏ நடவடிக்கையால் இங்குள்ள பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 22 பயனாளிகளுக்கு நேற்று இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், மாவட்ட கவுன்சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.சத்தியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலரும், மத்திய ஒன்றிய பொறுப்பாளருமான க.உமா கண்ரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட கழக பொறுப்பாளரும், தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 22 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போது கட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன், ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் ம.அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×