search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Alliance Party"

    • இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் உயர்த்தப் பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின் துறை தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    போராட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலன், தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தின் போது அந்த வழியே வந்த அரசு பஸ்களை வழிமறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பஸ்களை மறித்து சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

    மறியல் போராட்டத்தின் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய இந்தியா கூட்டணி கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் கடலூர், விழுப்புரம் சாலையில் பரபரப்பு நிலவியது.

    இதேபோல வில்லியனூர், சேதராப்பட்டு, பாகூர் உட்பட பல்வேறு இடங்களில் இந்தியா கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    • அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் காலை முதல் இயங்க தொடங்கியது.

    கடலூர்:

    புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி `இந்தியா' கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று (18-ந்தேதி) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள், திரையரங்குகள் அடைக்கப்படும். மேலும் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை ஓடாது என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி மாநிலம் அருகில் கடலூர் மாவட்டம் உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கும், பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவித்ததால் காலை 6 மணி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னைக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் காலை 6 மணிக்குள் புதுச்சேரி வழியாக சென்றன.

    அதன் பிறகு இயக்கவில்லை. சென்னைக்கு செல்லக்கூடிய பஸ்கள் விக்கிரவாண்டி வழியாக சென்றது.


    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடலூர் மற்றும் புதுச்சேரி போலீசாரை அணுகிய நிலையில், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் காலை முதல் இயங்க தொடங்கியது.

    அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்ற பஸ்சில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறினார்கள் . இதன் காரணமாக பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    கடலூர் மாவட்ட எல்லை பகுதியான சின்ன கங்கணாங்குப்பம் வரை கடலூர் மாவட்ட போலீசாரும், அதன் பிறகு புதுச்சேரி மாநில போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது.

    மேலும் சென்னைக்கு செல்லக்கூடிய பஸ்களை புதுச்சேரி வழியாக இயக்குவதற்கு அதிகாரிகள் தொடர்ந்து புதுச்சேரி மாநில போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய பஸ்கள் இயக்க ப்படாத காரணத்தினால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

    • தி.மு.க. நகர செயலாளர் கே.கே.ராசுக்குட்டி முன்னிலை வகித்தார்.
    • காங்கிரஸ் நகர தலைவர் வேலன்(எ)ரங்கசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரித்திடுக! பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிக்கும் மோடி அரசை கண்டித்தும், ஐ.நா. சபையே போரை நிறுத்து எனக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செயலாளர் கொளந்தசாமி தலைமை வகித்தார். தி.மு.க. நகர செயலாளர் கே.கே.ராசுக்குட்டி முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுக்கா செயலாளர் வி.ஏ.சரவணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.சுந்தரராஜு, காங்கிரஸ் நகர தலைவர் வேலன்(எ)ரங்கசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    ×