search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "insurance company"

    • போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.
    • இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

    இறந்ததாக போலி சான்றிதழ் வாங்கி 1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெண் ஒருவர் மோசடி செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

    மும்பையில் 2021 ஆம் ஆண்டு 11 ஆம் தேதி கஞ்சன் ராய் என்பவர் இதய நோயால் மரணமடைந்துள்ளார். கஞ்சன் ராயின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது மகன் தன்ராஜ் 20.4 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுள்ளார்.

    இதே இறப்பு சான்றிதழை பயன்படுத்தி இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 25 லட்ச ரூபாயை தன்ராஜ் பெற்றுள்ளார்.

    பின்பு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பவித்ரா என்பவர் உயிரிழந்துள்ளார். பவித்ராவின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது கணவர் ரோகித் 24.2 லட்ச ரூபாயை பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி 30 ஆம் தேதி இன்சூரன்ஸ் நிறுவனம் ஆடிட்டிங் செய்த போது ஒரே முகவரியில் இரண்டு வெவ்வேறு பெயர்களில் இன்சூரன்ஸ் பெற்றுள்ளதை பார்த்து சந்தேகம் அடைந்தது.

    இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் இது சம்பந்தமாக போலீசில் புகாரளித்தது.

    இந்த வழக்கின் விசாரணையில், 2 தனித்தனி ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி 5 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காஞ்சன் ராய் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பது தெரிய வந்தது.

    மேலும், காஞ்சன் ராய், பவித்ரா என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.

    இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த மோசடியில் இன்சூரன்ஸ் நிறுவனம், நகராட்சி அதிகாரிகள் உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கோரிக்கை மனு அளித்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    • தமிழ்நாடு அரசே முழு தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கருப்பு பேச்சு அணிந்திருந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவைக்கு பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்காததை கண்டித்தும், சம்பா பயிருக்கு இதுவரை காப்பீடு அறிவிக்காததை கண்டித்தும் அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-காவிரி நடுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் படி தமிழ்நாட்டிற்கு மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் அரசு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குறுவைக்கான பயிர் காப்பீடு திட்டத்திற்கு காப்பீட்டு நிறுவனங்கள் முன்வராத நிலையில் தமிழ்நாடு அரசே காப்பீட்டு நிறுவனத்தை தொடங்கி செயல்படுத்த வேண்டும்.

    ஆற்று பாதுகாப்பு கோட்டம் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் அய்யாசாமி பட்டி பகுதியில் முழுமை யாக தூர்வாரப்படாமல் பணி நடைபெற்றது. எனவே உரிய ஆய்வு மேற்கொண்டு தூர்வாரப்பட வேண்டும். தென்னை விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசே முழு தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதேபோல் ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    • பழனியப்பன் (வயது 48). இவர் ஒரு லாரி வைத்து, அவரே டிரைவராக பணிபுரிந்து, சுயமாக தொழில் செய்து வந்தார்.
    • கனமழை பெய்ததால் அங்கு சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுள்ளார். மழை நின்ற பிறகு, திடீரென லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, வேலம்மாவலசில் வசிப்பவர் பழனியப்பன் (வயது 48). இவர் ஒரு லாரி வைத்து, அவரே டிரைவராக பணிபுரிந்து, சுயமாக தொழில் செய்து வந்தார். அந்த லாரிக்கு, இன்சூரன்ஸ் கம்பெனியில் பிரீமியம் செலுத்தி பாலிசி பெற்றுள்ளார்.

    கடந்த 2012ம் ஆண்டு, மே மாதம் திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு நகரில் இருந்து நூல் பண்டல் சரக்குகளை ஏற்றிக் கொண்டு, ராஜஸ்தான் செல்வதற்காக பழனியப்பன் லாரியை ஓட்டிச் சென்றார்.

    லாரி தீ பிடித்தது

    அரவக்குறிச்சி சுங்கச்சாவடி அருகே சென்றபோது கனமழை பெய்ததால் அங்கு சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுள்ளார். மழை நின்ற பிறகு, திடீரென லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது.

    இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வருவதற்குள் லாரியில் இருந்த நூல் பண்டல்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. மேலும் லாரியும் தீயில் எரிந்து சேதமானது.

    வாகனத்தில் தீ பிடித்ததால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு ரூ. 12 லட்சம் கேட்டு அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறைப்படி விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் சர்வேயர் சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னரும் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கப்படவில்லை.

    நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு

    இதனைத் தொடர்ந்து அவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், இன்சூரன்ஸ் கம்பெனி மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கிய தீர்ப்பில், இன்சூரன்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளருக்கு ரூ.9 லட்சத்து 28 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என உத்தரவிட்டது.

    பின்னர் மேல்முறை யீட்டில் இந்த தொகை செலுத்தப்படும் வரை 7.5 சதவீதம் வட்டியும் சேர்ர்த்து வழங்க வேண்டும் என்று மாநில நுகர்வோர் கோர்ட்டு உத்திரவிட்டது.

    இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீடு தராமல் இழுத்தடிப்பு செய்ததால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் இன்சூரன்ஸ் கம்பெனி மீது நடவடிக்கை எடுத்து தொகையை வசூலித்து தர வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில், கடந்த ஜனவரி மாதத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்தார்.

    சமரச பேச்சுவார்த்தை

    வழக்கு தாக்கல் செய்து 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பிரச்சனையை தீர்க்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, சமரச பேச்சுவார்த்தைக்காக வக்கீல் பாலசுப்பிரமணியம் என்பவரை கடந்த வாரம் நியமனம் செய்தது. சமரச பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட நுகர்வோர் பழனியப்பனுக்கு ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்து 132 வழங்க இன்சூரன்ஸ் கம்பெனி சம்மதம் தெரிவித்தது. இதையொட்டி, இழப்பீட்டு தொகைக்கான காசோலையை, நுகர்வோர் கோர்ட்டு உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில், நீதிபதி டாக்டர் ராமராஜ் பாதிக்கப்பட்ட பழனியப்பனிடம் வழங்கினார். 

    • காப்பீட்டு நிறுவனம் ரூ.12.10 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு வழங்கியுள்ளது
    • லாரி காணாமல் போன வழக்கில் தீர்ப்பு

    கரூர்:

    காணாமல் போன லாரிக்கு காப்பீடுத்தொகை வழங்காத நிறுவனம் ரூ.12.10 லட்சம் வழங்க கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கரூர் கருப்பகவுண்டன்புதூர் கிழக்கை சேர்ந்தவர் பாலுசாமி. இவர் மனைவி ப்ரியா. இவர்கள் மகன்கள் நிதிஷ் (வயது 17), வேலுசாமி (9). பாலுசாமி கடந்த 2012-ம் ஆண்டு சொந்தமாக லாரி வாங்கியுள்ளார். கரூரை சேர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் 2012-ம் ஆண்டு பிப்.6-ந் தேதி ரூ.10 லட்சத்திற்கு லாரியை காப்பீடு செய்துள்ளார். வீட்டு முன் நிறுத்தியிருந்த லாரி மார்ச் 3-ந் தேதி காணாமல் போயுள்ளது.

    இதுகுறித்து போலீசில் புகார் அளித்த பாலுசாமி, காப்பீடு நிறுவனத்தில் இழப்பீடு கோரியுள் ளார். ஆனால், காப்பீடு நிறுவனத்திற்கு தாமதமாக தகவல் தெரிவித்ததாகக்கூறி காப்பீடு இழப்பீடு வழங்க மறுத்துவிட்டது.

    இதையடுத்து கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைத்தில் பாலுசாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நடந்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2016 -ம் ஆண்டு செப்டம்பர் 10 -ந் தேதி பாலுசாமி உயிரிழந்தார்.

    இவ்வழக்கை விசாரித்த ஆணையத்தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்னசாமி ஆகியோர் காப்பீட்டு தொகை ரூ.10 லட்சத்தை லாரி காணாமல் போன தேதியிலிருந்து 7.5 சதவீதம் வட்டியுடனும், சேவை குறைப்பாட்டுக்காக இழப்பீடாக ரூ.2 லட்சத்தை புகார் அளித்த தேதியிலிருந்து 7.5 சதவீதம் வட்டியுடனும் இத்தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் வழங்கவேண்டும். வழக்கு செலவாக ரூ.10,000 வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

    இன்சூரன்சு நிறுவனத்தின் பெயரில் போலி ரசீது கொடுத்து மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை திருமங்கலம் அருகேயுள்ள செக்கா னூரணியை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். உசிலம்பட்டி அருகில் உள்ள குப்பானம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (35) என்பவர் மூலம் வருடாந்திர லாரி இன்சூரன்சை புதுப்பித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெயபாண்டிக்கு சொந்தமான லாரி சம்பவத்தன்று விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மதுரை கிளையில் இழப்பீடு கோரி விண்ணப்பித்து உள்ளார்.

    அப்போது தான் ஜெயபாண்டி தாக்கல் செய்த இன்சூரன்ஸ் ரசீது போலி என்ற விவரம் தெரியவந்தது.

    மதுரை தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் பாலமுருகன், இது தொடர்பாக உசிலம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரசீது வழங்கியதாக அலெக்ஸ்பாண்டியனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ×