search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intensive Vehicle Check"

    • மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி போன்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீ சார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுவிலக்கு அமலாக்க துறை டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் டாஸ்மாக் கடைகளை சோத னையிட்டனர். ஈரோடு மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் இரவு முதல் காலை வரை விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. வெளியூர் ஊரிலிருந்து ஈரோடுக்கு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அதன் பிறகே உள்ளே அனு மதிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மூலப்பட்டறை, பஸ் நிலையம், வீரப்பன்ச த்திரம் போன்ற பகுதிகளிலும் வாகன சோதனை நடைபெற்றது.

    இதேபோல் கோபி, அந்தியூர், பவானி, சத்தியம ங்கலம், பெருந்துறை, மொட க்குறிச்சி, கொடுமுடி போன்ற பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய நடந்த சோதனை இன்று காலையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. 

    ×