search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iron pipe"

    • புதைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்பிலான கொடி கம்பத்தில் சாய்ந்து மின்கம்பியில் பட்டு ராமநாதனை மின்சாரம் தாக்கியது.
    • சம்பவஇடத்திலேயே பலியானர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை பெரிய தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் ராமநாதன் (வயது 22).

    இவர் ஐ.டி.ஐ முடித்துவிட்டு அரசு போக்குவரத்து பணிமனையில் பயிற்சி மெக்கானிக்காக உள்ளார்.இந்த நிலையில் நேற்று முதல் நாள் நள்ளிரவில் சீயாத்தமங்கை கைகாட்டி அருகே மண் தரையில் புதைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்பிலான கொடி கம்பத்தில் எதிர்பாராத நிலையில் சாய்ந்தபோது கொடி கம்பம் அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் பட்டு ராமநாதனை மின்சாரம் தாக்கியது.

    இதில் ராமநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராமநாதன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தீபாவளிக்கு முதல் நாளில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

    • வாக்குவாதம் ஏற்பட்டதில் அருகில் இருந்தவர்கள் மணிவண்ணனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • மணிவண்ணன் இரும்பு பைப்பால் அடித்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வாய்மேடு தெற்குபகுதியை சேர்ந்த சேகர் என்பவரது புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது இரவு 11 மணி அளவில் வாய்மேடு மேற்கை சேர்ந்த செல்வகுமார்( வயது 46) மற்றும் வாய்மேடு தெற்குபகுதியை சேர்ந்தமணிவண்ணன் (28) ஆகிய இருவரும் மது போதையில் இருந்துள்ளனர்

    அப்போது அவர்களு க்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் அருகில் இருந்த வர்கள் மணிவண்ணனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் பிறகு இரவு11 .30 மணி அளவில்செல்வகுமார் சைக்கிளில் தனது வீட்டி ற்கு செல்லும்போது மன்னாடி நகர் செல்லும் தெற்கு ஓடை அருகில் செல்வக்குமார் சத்தம் போட்டதாகவும் அப்போது மணிவண்ணன் இரும்பு பைப்பால் அடித்து விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

    அருகில் இருந்தவர்கள் செல்வகுமாரை மீட்டு திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் மருத்துவர்கள் பரிசோ தனை செய்துவிட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

    ×