search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kannada cinema"

    • கன்னட திரை உலகிலும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகைகள் புகார்.
    • கன்னட திரை உலகிலும் பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாள திரை உலகில் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள திரை உலகை தொடர்ந்து தமிழ் திரை உலகிலும் பாலியல் தொந்தரவு நடந்ததாக சில நடிகைகள் கூறினர்.

    தமிழ், மலையாள சினிமாவை தொடர்ந்து கன்னட திரை உலகிலும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகைகள் சஞ்சனா, நீது ஆகியோர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளனர்.

    கன்னட சினிமா உலகில் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இதுபற்றி கர்நாடக சினிமா வர்த்தக சபை கூட்டத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை பற்றிய புகார்கள் குறித்து பேசவிடாமல் தடுத்துவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடக முதல்மந்திரி சித்தராமையாவுக்கு கன்னட இயக்குனர் கவிதாலங்கேஷ் தலைமையிலான குழுவினர் சினிமா உலகில் பாலியல் தொல்லை பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என கடிதம் அனுப்பினார். கன்னட திரை உலகிலும் பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிவ ராஜ்குமார்.
    • தற்பொழுது அவரது 131- வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

     கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிவ ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார்.

    தற்பொழுது அவரது 131- வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு நேற்று பெங்களூருவில் தொடங்கியது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகவுள்ளது.

    இப்படம் கார்த்திக் அத்வைத் இயக்கும் முதல் கன்னட திரைப்படமாகும். இவர் இதற்கு முன் பாயும் ஒளி நீ எனக்கு என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் நடிகர் யாஷ் சிவ ராஜ்குமாரை சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் அங்கு பேசினர். இவர்கள் சந்தித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நட்சத்திர ஜோடியான இவர்கள் பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் அவர்கள் விவாகரத்து தாக்கல் செய்துள்ளனர்.
    • கன்னட பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்ற சந்தன் செட்டிக்கும் நிவேதிதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

    கன்னட பிக் பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான சந்தன் செட்டியும் அவரது மனைவி நிவேதிதா கௌடாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்துள்ளனர். கன்னட பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்ற சந்தன் செட்டிக்கும் நிவேதிதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சாந்தன் செட்டி நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்ற பன்முகத்தன்மையோடு கன்னட சினிமாவில் இயங்கி வருபவர்.

     

    இந்நிலையில் நட்சத்திர ஜோடியான இவர்கள் பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் அவர்கள் விவாகரத்து தாக்கல் செய்துள்ளனர். இந்த செய்தியை நிவேதிதா தனது இன்ஸ்டாகிராம் பக்க்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், இந்த நாள், நானும் சந்தன் செட்டியும் நல்ல புரிதலோடு ஒருமனதாக எங்களது திருமணத்தை சட்டரீதியாக முறித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளோம்.

    ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எங்களது முடிவுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் சென்றாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அக்கறையோடுதான் இருப்போம். உங்களின் ஆதரவு எங்களை இந்த இக்கட்டான காலகட்டத்தை கடக்க உதவி செய்யும். நன்றி என்று தெரிவித்துள்ளார்.

     

    சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நாக சைதன்யா - சமந்தா,   ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி என இந்த பாட்டியல் நீளும். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல்.
    • சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார்

    2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல். அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தை இயக்கினார்.

    இப்படத்தின் மூலம் உலகத்தையே கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். கே.ஜி.எஃப் பாகம் 1 மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் பாகம் இரண்டை இயக்கினார்.

    கே.ஜி..எஃப் 2 ஒரு பான் இந்திய படமாக அமைந்தது. கே.ஜி.எஃப் திரைப்படம் கன்னட சினிமாவின் அதீக வசூலித்த படங்கள் பட்டியலில் 4-ஆம் இடத்தை பெற்றுள்ளது. 1500 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்ததாக சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில்  அறிமுகமாகினார். சலார் வெற்றியைத் தொடர்ந்து சலார் பாகம் இரண்டை நடிகர் பிரபாஸ் வைத்து இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜூலை மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    ஜூனியர் என்.டி.ஆரின் 31 படத்தை இயக்கவுள்ளார் அற்கடுத்து கே.ஜி.எஃப் இன் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×