search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karke"

    • மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரின் எக்ஸ் பதிவில், "காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் தனது கட்சி தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், "கார்கே அவர்களுக்கு மிகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் அயராத சேவையும், மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. நீண்ட ஆரோக்கியத்துடன் நீங்கள் இருக்க வேண்டுமென்று அன்புடன் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடத்த இருந்த ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ இந்த மாதம் 26-ந்தேதி நடக்கிறது.
    • நிச்சயமாக தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் வேகத்தை அதிகரிக்கும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.

    இந்த கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலையே நீடிக்கிறது. மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவேன் என்று அறிவித்து உள்ளார்.

    இந்த கூட்டணியில் பிரதான கட்சியான தி.மு.க. உறுதியாக உள்ளது. அதே நேரம் இங்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இதுவரை நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதமே திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடத்த இருந்த 'வெல்லும் ஜனநாயகம் மாநாடு' இந்த மாதம் 26-ந்தேதி நடக்கிறது.

    இந்த மாநாட்டுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் தலைவர் கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ. (எம்.எல்) திபாங்கர் பட்டாச்சார்யா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    பிரமாண்டமாக நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முன்னிலை வகிக்கிறார்.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெறும் முதல் பொதுக் கூட்டம் இது. இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கூறும்போது, இது எதிர்க் கட்சி கூட்டணியின் பிரசாரத்தின் தொடக்கமாகத் தான் பார்க்கப்படும். நிச்சயமாக தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் வேகத்தை அதிகரிக்கும் என்றார்.

    வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல்தான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் அடிப்படை வாதமும், மதவாதமும் அதிகரித்துவிட்டது. பா.ஜனதா தொடர்ந்து வெற்றி பெற்று அதன் அஜன்டாவை நிறைவேற்றி வருகிறது. தேசிய கல்வி கொள்கை, அயோத்தியில் ராமர் கோவில், 370-வது சட்டப்பிரிவு நீக்கம் என்று பலவற்றை செய்து உள்ளது. இந்திய அரசியலமைப்பை மாற்றும் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் குறிப்பிட்டு உள்ளது.

    ×