என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kilbavani canal water"
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறை கேட்பு நாள் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.
மேலும் விவசாயி ஒருவர் பேசும் போது, “கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் தேதியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். ஆனால் அதன் படி வாய்க்காலில் ஏன் தண்ணீர் திறக்கவில்லை? இதனால் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது” என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது.-
கீழ்பவானி வாய்க்காலுக்கு முன் கூட்டியே தண்ணீர் திறந்தால் அது பாசனத்துக்கு சரியாக இருக்காது என்று ஒரு சில விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விசயத்தில் சில விவநாய சங்கத்தினர் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். இது சரியானது அல்ல.
விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் பொழுது தண்ணீர் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Farmers
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்