search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KoThaanam"

    • கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும்.
    • நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.

    *கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும்.

    *நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.

    *தலை ஈற்றுப் பசுவை தானம் செய்வது மிகவும் சிறந்தது.

    *கறவையுள்ள பசுவைத் தானம் கொடுப்பதே முறை.

    *தாயையும்,பால் அருந்தும் கன்றையும் பிரித்து தானம் அளிக்க கூடாது.

    *பசுவோடு காளையையும் சேர்த்து தானம் செய்வது மேன்மையாகும்.

    *பால் கறப்பதற்கான பாத்திரமும் சேர்த்து கொடுத்தல் வேண்டும்.

    *பசுவைத் தானம் செய்யும் போது, குறைந்தது ஒரு வருட உண விற்கும் பராமரிப்புக்கும் பொருளாகவோ, பணமாகவோ வகை செய்வது இன்னும் மேன்மை தரும்.

    • நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும்.
    • பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், கணவன்& மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.

    குழந்தை பாக்கியம் பெற

    கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன.

    கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும்.

    குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக் காட்டாகும்.

    திருமணம் நடைபெற

    நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும்.

    விவாகம் நடை பெறாதிருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமையவில்லை என்றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத் தரும்.

    ஆணுக்கு நல்ல பெண் மனைவியாகவும், பெண்ணுக்குச் சிறந்த நற்குணமுள்ள ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை.

    பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், கணவன்& மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.

    வியாதி நீங்க:

    ரோகம்,வியாதி ஆகியவை கோமாதா பூஜையினால் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது.

    செல்வச் செழிப்பு எற்படுகிறது. தரித்திரம் நீங்குகிறது.

    சிறந்த பசுவை, உயர்ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும்.

    இந்தக் கோபூஜையினால்,கோதானத்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.

    பிதுர் சாபம் தீர:

    பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. பித்து, பைத்தியம் போன்றவை கோதானத்தினால் குணமாகி நல்ல கதி கிடைக்கிறது.

    சனிபகவான் தோஷம் விலக

    சனிக்கிரக பீடை, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி போன்ற சனிக்கிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட, கோபூஜையும், கோதானமும் செய்ய வேண்டும்.

    இத்தகு அதி விசேஷமான,மகத்துவம் நிறைந்த பூஜை கோபூஜையே ஆகும்.

    ×