search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolakala Srinivasan"

    • மணிப்பூர் மாநிலத்தில் அபின் சாகுபடியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கையை தடுக்கும் வகையில் கலவரமாக மாறி வன்முறை தொடர்கிறது.
    • கோலாகல சீனிவாசனுக்கு சிந்தனையாளர் பிரிவு சார்பில் நினைவுபரிசாக செங்கோல் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    பா.ஜனதா கட்சி சிந்தனையாளர் பிரிவு சார்பாக பொதுசிவில் சட்டம், மணிப்பூர் விவகாரம் உண்மை நிலவரம் என்ன? என்பது குறித்த சிந்தனை கருத்தரங்கம் திருப்பூர் -காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மகாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.

    சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் குப்புராஜ் முன்னிலை வகித்தார். மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் பங்கேற்று பேசும்போது, திருமணம், திருமண பதிவு, வயது, திருமண முறிவு, ஜீவனாம்சம், வாரிசு, தத்தெடுப்பு, காப்பாளர், சொத்துரிமை இவை அனைத்து சமயத்தினருக்கும் பொதுவான விதிமுறைகளை கொண்டதே பொதுசிவில் சட்டமாகும்.

    மணிப்பூர் மாநிலத்தில் அபின் சாகுபடியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கையை தடுக்கும் வகையில் கலவரமாக மாறி வன்முறை தொடர்கிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு காவல்துறையில் கூட இனப்பிரிவு ஏற்பட்டு இருக்கிறது.

    வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுறுவலை தடுக்க பா.ஜனதா அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார். பின்னர் கோலாகல சீனிவாசனுக்கு சிந்தனையாளர் பிரிவு சார்பில் நினைவுபரிசாக செங்கோல் வழங்கப்பட்டது.

    ×