search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kutty padmini"

    • இந்த துறையில் நல்லவர்களும் உள்ளனர். கெட்டவர்களும் உள்ளனர்.
    • சின்மயி, ஸ்ரீரெட்டி போன்றோருக்கு தடை விதித்து விட்டனர்.

    மலையாளத் திரைத்துறையில் புயலை கிளப்பி உள்ள ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகை குட்டி பத்மினி கருத்து தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது:-

    ''மலையாள பட உலகில் நடந்துள்ள விஷயங்கள் குறித்து நான் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பே பேசி இருக்கிறேன். அது உண்மைதான். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

    அதேபோல் தொலைக்காட்சி தொடர்களில நடிக்கும் நடிகைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். டி.வி. நடிகைகளை ஒப்பந்தம் செய்யும்போது நீங்கள் யாருக்கும் கீழ்பணிய வேண்டாம். ஏதேனும் பிரச்சனை வந்தால் எனக்கு போன் செய்யுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறேன்.

    இந்த துறையில் நல்லவர்களும் உள்ளனர். கெட்டவர்களும் உள்ளனர். ஆண்கள் மீது குற்றம் சொல்லும் அதே வேளையில் பெண்களையும் குற்றம் சொல்லுவேன்.

    நீங்கள் எதற்காக அதற்கு ஒத்துக்கொள்கிறீர்கள். முடியாது என்று சொல்ல வேண்டும். சில நேரம் மறுக்கும் நடிகைகளை ஒதுக்கி விடும் நிலைமையும் இருக்கிறது.

     

    சின்மயி, ஸ்ரீரெட்டி போன்றோருக்கு தடை விதித்து விட்டனர்.

    பாலியல் சீண்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர்- நடிகைகள் காதல் வயப்படுவது அவர்கள் முடிவு. ஆனால் நடிக்கும் இடத்தில் நீ ஒப்புக்கொண்டால்தான் வேலை கொடுப்பேன் என்று சொல்வது தவறு.

    தயாரிப்பு மானேஜர் உள்ளிட்ட சிலரும் பெண்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள். போக்சோ சட்டம் மாதிரி வரவேண்டும்.

    நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன். அது வெளியாகும்போது பல பெரிய நடிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். 95 சதவீதம் பெண்களை பயன்படுத்தி விட்டு வேலை கொடுப்பது இல்லை. எனக்கும் நடந்து இருக்கிறது.

    எனக்கு 10 வயதாகும்போது பெரிய நிறுவனத்தில் ஒருவர் தவறாக நடந்தார். என் அம்மா தட்டி கேட்டதும் வெளியேற்றி விட்டனர்.

    சினிமாவில் மட்டுமன்றி சின்னத்திரையிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும்

    இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேவிகா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
    • 1990-ம் ஆண்டில் கணவர் தேவதாசுடன் விவகாரத்தான பின்பு சென்னையில் மகள் கனகாவுடன் வசித்து வந்தார்.

    நடிகை குட்டி பத்மினியுடன் சிரித்தபடி அமர்ந்திருப்பவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர். இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் காணம்படும் அவர் வேறு யாருமல்ல நடிகை கனகா தான். சென்னையில் நேற்று முன்தினம் நடிகை குட்டி பத்மினியும் கனகாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்து கொண்டனர். அந்த மகிழ்ச்சியில் எடுத்துக்கொண்ட படம்தான் இது.


    தேவிகா

    கனகாவின் தாயார் தேவிகா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கிறார். 1972-ம் ஆண்டு நடிகர் தேவதாஸ் என்பவருடன் திருமணமாகி அவருக்கு 1973-ம் ஆண்டு பிறந்தவர்தான் கனகா. முதலாளி என்ற படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதி, சிவாஜியின் கர்ணன் படம் உள்பட குலமகள் ராதை, பலே பாண்டியா, ஜெமினியுடன் சுமைதாங்கி என ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் புகழின் உச்சியில் இருந்தவர் தேவிகா.

    1990-ம் ஆண்டில் கணவர் தேவதாசுடன் விவகாரத்தான பின்பு சென்னையில் மகள் கனகாவுடன் வசித்து வந்தார். 2002-ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். அவரது மகளான கனகா 1989-ம் ஆண்டில் ராமராஜனுக்கு ஜோடியாக 'கரகாட்டகாரன்' படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


    கனகா

    தொடர்ந்து ரஜினி, சரத்குமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். அவர் நடித்த படங்கள் மட்டுமின்றி பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. கனகா தந்தையுடன் பிரச்சினை, காதல் தோல்வி, சொத்து பிரச்சனை என தொடர்ந்து பல பிரச்சினைகளால் தனிமையில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நடிகை குட்டி பத்மினி அவரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்துள்ளார். இருவரும் ஒரு ஹோட்டலில் நீண்ட நேரம் கடந்த கால நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசி மகிழ்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. புகைப்படத்தில் இருப்பது கனகாவா இது? என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×