என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "LENDING CAMP"
- திருப்பூர் மாவட்டத்திற்கு 2023-24 ம் ஆண்டிற்கு டாம்கோ திட்டத்தின் கீழ் ரூ. 1.55 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பல்வேறுகடன் திட்டங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்திற்கு 2023-24 ம் ஆண்டிற்கு டாம்கோ திட்டத்தின் கீழ் ரூ. 1.55 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000 மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்படுகிறது.
மேலும் சிறுபான்மை மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை - முதுகலை தொழிற்கல்வி - தொழில் நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.அதன் அடிப்படையில் டாம்கோ திட்டங்களின் பயனை சிறுபான்மையின மக்கள் முழுமையாக அடைய கீழ்க்காணும் இடங்களில் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெறுகிறது.
25-ந்தேதி திருப்பூர் கூட்டுறவு நகர வங்கி, 26-ந்தேதி தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, 27-ந்தேதி உடுமலை நகர கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் 5மணி வரை நடைபெறும்.
இம்முகாமில் புதியதொழில் மேற்கொள்ளவும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் சிறுபான்மையினருக்கு கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ.98,000 நகர்புறங்களில் வசிப்போர் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சாதிச்சான்று, ஆதார்கார்டு, செல்லத்தக்க வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் - திட்டதொழில் அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுபவர்கள் மட்டும்) மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மை சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்.0421-2999130 மற்றும் மின்னஞ்சல் dbcwotpr@gmail.com - ஐ தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- 20 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கினார்
- விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருக்க கூடாது என அறிவுரை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் வங்கியாளர்களுக்கான சிறப்பு ஆய்வுக் கூட்டம் மற்றும் தொழில் கடன் வழங்கும் முகாம் நடந்தது.
முகாமிற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி மாவட்ட தொழில் மையம் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.2.61 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கி பேசினார்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு வங்கிகள் துரிதமான முறையில் கடன் உதவிகளை வழங்க வேண்டும். அரசின் மானியத்துடன் கூடிய கடன் விண்ணப்பங்களை வங்கிகள் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் வைத்திருக்க கூடாது என கூறினார்.
இதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவி, மகளிர் திட்ட இயக்குநர் சையித் சுலைமான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா தாட்கோ மேலாளர் ஏழுமலை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் டாப்செட்கோ, டாம்கோ மூலமாக பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினருக்கு கடன் வழங்க வருகிற 30-ந்தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கு டாப்செட்கோ திட்டத்தின் மூலமாக ரூ.2 கோடியும் டாம்கோ திட்டத்தின் மூலமாக ரூ.1.55 கோடியும் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உள்பட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் இந்த திட்டங்களில் கடன் பெற விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.கிராமப் புறங்களில் வசிக்கும் சிறுபான்மையினருக்கான ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரமும், நகா்புறங்களில் வசிப்போருக்கு ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா் ஜாதிச்சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம், திட்ட தொழில் அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனக் கடன் பெறுபவா்கள் மட்டும்) மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.இதுதொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்: இந்த கடன் வழங்கும் முகாமானது ஜனவரி 30 ஆம் தேதி காலை 10.30 முதல் மாலை 4 மணி வரையில் திருப்பூா் நகர கூட்டுறவு வங்கி, உடுமலை நகர கூட்டுறவு வங்கி, தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- தீவனப்புல் வளர்க்கவும்-புல்கறணைகள் வாங்கவும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
- கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதை தொகுப்பும் மற்றும் புல்கறணைகள் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரைப்பார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்கக்கூடாது. மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பம் செய்ய பெரம்பலூர் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி, உரிய விவரத்தினைப் பெற்று புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, ஆகிய சான்றுகளுடன் ஆன்லைனில் http://application.tahdco.com, http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-276317, 9445029470 ஆகிய தொலைப்பேசி எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்."
- திருச்சி இருதயபுரம் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குதல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
- இவ்வங்கியில் சிறு வணிகர் கடன் ரூ.27.35 லட்சமும் மற்றும் இதர கடன்கள் உள்பட ெமாத்தம் ரூ.1869.24 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது
திருச்சி:
திருச்சி இருதயபுரம் கூட்டுறவு வங்கியில் கடன் மேளா திட்டம், திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சியை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் திருச்சி சரக கூட்டுறவு துணைப்பதிவாளர் ஜி.சாய்நந்தினி கலந்து கொண்டு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள் கடன் வாங்கி பயன்பெறும் வழிமுறைகள் பற்றி ஆலோசனைகள் வழங்கினார். திருச்சி இருதயபுரம் கூட்டுறவு வங்கி 1912-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இவ்வங்கியில் மொத்தம் 18,783 உறுப்பினர்கள் உள்ளனர். மொத்த உறுப்பினர்களின் வைப்புதொகை ரூ.1681.70 லட்சம், சிறுவணிகர் கடன் ரூ.27.35 லட்சமும் மற்றும் இதர கடன்கள் உள்பட ெமாத்தம் ரூ.1869.24 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் இருதயபுரம் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் டி.மீனாம்பிகை, வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஜென்சி, வங்கியின் மேலாளர் சி. செந்தில்குமார், இருதயபுரம் கூட்டுறவு வங்கிதலைவர் பி. செல்லப்பன்,
துணைத்தலைவர் ஏ.ஜெயராஜ், வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அ.ஹபிபுல்லா, வங்கி அலுவலர்கள் மற்றும் வங்கிப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்