search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Livestock Protection"

    • பாலமேடு அருகே கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடந்தது.
    • இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    அலங்காநல்லூர்

    பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார், திருமங்கலம் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலர் கிரிஜா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 180-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து மருந்து வழங்கினர்.

    சிறப்பாக கால்நடைகளை பராமரித்த உரிமையாளர்கள் 3 பேருக்கு சான்றிதழ், பரிசுகள் மற்றும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெள்ளையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், பேரூர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், கவுன்சிலர் சரவணன், அணி அமைப்பாளர்கள் பிரதாப், சந்தனகருப்பு, சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×