search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lose"

    • தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தோல்வியால் மனமுடைந்து வெளியேறினர்
    • தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று இந்தியர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இறுதிப்போட்டிவரை எந்த மேட்சிலும் இரண்டு அணிகளும் தோல்வியடையாமல் முன்னேறி வந்த நிலையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.

    இந்தியர்கள் என்ற அடிப்படையில் இந்த வெற்றியை ஒரு பக்கத்தில் இருந்தே பெரும்பாலானோர் பார்க்கும் நிலையில் வெற்றிக்காக கடுமையாக போராடிய தென் ஆப்பிரிக்க அணி தோல்வியால் மனமுடைந்துள்ளதை பற்றி சிலர் மட்டுமே எண்ணியிருக்கக் கூடும்.

     

    ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று இந்தியர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர்களும், அணியின் பணியாளர்களும் மைதானத்தைவிட்டு  மிகவும் வருத்தத்துடன் வெளியேறியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் தென் ஆபிரிக்க வீரர்களை நோக்கி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் [We love you] என்று கோரஸ் செய்து  கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வரும் நெட்டிஸன்கள், இந்தியர்களின் நல்லியல்பை எண்ணி பெருமைப்பட்டு வருகின்றனர். 

    • பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
    • முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் அம்மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. 24 வருடமாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை பாஜகவும் 51 இடங்களை பிஜு ஜனதா தளமும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 14 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர்த்து 3 சுயேட்ச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

    ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜகவின் மோகன் சரண் மாஜி நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த முறை பதிவியேற்பவர்களில் 82 பேர் முதல் முறையாக எம்.எல்.ஏக்களாக பதியேற்பவர்கள் ஆவர்.

    சட்டமன்றத் தேர்தலில் கன்டாபாஞ்சி மற்றும் கின்ஜிலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கின்ஜிலியில் வெற்றி பெற்ற நிலையில் கன்டாபாஞ்சில் பாஜக வேட்பாளர் லக்ஷ்மன் பக் என்பவரிடம் 16,334 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

    அதாவது, நவீன் பட்நாயக் கின்ஜிலியின் எம்.எல்.ஏ வாக மேடையில் பதிவேற்றபின் இறங்கி நடந்து வரும்போது கன்டாபாஞ்சில் அவரை தோற்கடித்து முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    உடனே பட்நாயக் ' ஓ நீங்கள் தான் என்னை தோற்கடித்தீர்கள்' என்று கூறியபடி அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து அகன்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஆயுத எழுத்து' படத்தில் பழம்பெரும் அரசியல்வாதியாக இருக்கும் பாரதிராஜாவும் முதல்முறையாக சட்டமன்றத்துக்கு வரும் சூர்யாவும் கிளைமாக்சில் சந்தித்து பேசும் காட்சியை தற்போது ஒடிசா சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் பிரதி செய்வதாக அமைத்துள்ளது என நெட்டிசன்கள் அபிப்பிராயப்படுகின்றனர். முன்னதாக நவீன் பட்நாயக் பதியேற்க சட்டமன்றத்துக்குள் வரும்போது பாஜகவினர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதின.
    • பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 23-25, 25-19, 25-18 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை வென்றது.

    சென்னை:

    நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே. சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்றுமாலை தொடங்கியது.

    தொடக்க விழாவுக்கு தமழ்நாடு தடகள சங்க தலைவரும், போட்டி அமைப்புக்குழு தலைவ ருமான டபிள்யூ.ஐ.தேவாரம் தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் ஆபாஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், கே.ஏ.ஜி.டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜி.ரவிச்சந்திரன், ஒட்டல் லீ பேலஸ் இயக்குனர் ஏ.என். கார்த்திக், போட்டி அமைப்புக்குழு நிர்வாகிகள் பி.ஜெகதீசன், சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதின. இதில் வருமானவரி 25-17, 25-23 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. அணி 19-25, 26-24, 25-23 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்.மை போராடி வென்றது. இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 17-25, 20-25 என்ற கணக்கில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. ஐ.ஓ.பி. அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தியது.

    பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 23-25, 25-19, 25-18 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். 2-0 என்ற கணக்கில் எஸ்.டி.ஏ.டி. அணியை வீழ்த்தியது.

    இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு ஆட்டங்க ளில் ஜி.எஸ்.டி-டி.ஜி.வைஷ்ணவா, தமிழ்நாடு போலீஸ்-வருமானவரி, இந்தியன்வங்கி-எஸ்.ஆர்.எம்., ஐ.ஒ.பி.-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதுகின்றன.

    பெண்கள் பிரிவில் ஐ.சி.எப்.-எஸ்.ஆர்.எம்., தமிழ்நாடு போலீஸ்-டாக்டர் சிவந்தி கிளப் அணிகள் மோதுகின்றன.

    • 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.
    • பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்தது.

    உலக கோப்பை போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெ்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக கோப்பையை வெல்லப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுகிறது. எந்த அணி உலக கோப்பையை வெல்லும்? என்பது தொடர்பாகவும், யார் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள், பந்து வீசுவார்கள், எவ்வளவு ஸ்கோர் குவிக்கப்படும் என்பது தொடர்பாக பெட் டிங் கட்டப்பட்டு வருகிறது.

    சுமார் 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.

    ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் இந்த தொகை பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் கடந்த மாதம் 14-ந் தேதி அகமதாபாத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரூ.40 ஆயிரம் கோடிக்கு பந்தயம் நடைபெற்றது. அதை மிஞ்சும் வகையில் இறுதிப் போட்டியில் ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது.

    பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன. மேலும் இவர்கள் உலக கோப்பை இறுதி ஆட்டம் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக இருக்கும் என்றே கருதுகின்றனா். 300 முதல் 400 ரன் வரை வரும் என்று சிறிய அளவிலான சூதாட்டதரகர்கள் பெட்டிங் கட்டி உள்ளனர்.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் மீது பெரும்பாலானோர் பந்தயம் கட்டி உள்ளனர். பந்து வீச்சை பொறுத்த வரையில் முகமது ஷமி மீது அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பும்ரா, முகமது சிராஜ் மீதும் பந்தயம் கட்டப்பட்டுள்ளது.

    • புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன.
    • 2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 'லீக்' ஆட்டங்களும், 'பிளேஆப்' சுற்றின் 2 போட்டிகளும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி 'லீக்' ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டியில் வெற்றி பெற்றன. மூன்றில் தோற்றது.

    'பிளேஆப்' சுற்றின் 2 ஆட்டங்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான முதல் தகுதி சுற்று (குவாலிபையர் 1) 23-ந்தேதியும், வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) போட்டி 24-ந்தேதியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-இரண்டாவது இடத்தை பிடித்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். குஜராத் அணிக்கு பதிலடி கொடுத்து சி.எஸ்.கே. இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடும்.

    புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன. லக்னோ 3-வது இடத்தை பிடித்து உள்ளது. 4-வதாக நுழையும் அணி இன்று இரவு தெரியும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத் தில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் 3-வது சுற்றில் தோல்வியை தழுவினார்.
    லண்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் தங்களது 3-வது சுற்றில் வெற்றி கண்டனர்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை வென்றவரும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப்(ருமேனியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள சு-வெய் ஹிசை (சீனதைபே) 3-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி 20 நிமிடங்கள் போராடி வீழ்த்தினார். 32 வயதான சு-வெய், விம்பிள்டனில் முதல் முறையாக 4-வது சுற்றை எட்டினார். போட்டித் தரநிலையில் முதல் 10 இடங்களை பெற்ற வீராங்கனைகளில் தற்போது 9 பேர் தோற்று வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது. 
    நமது நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 2017-18 நிதி ஆண்டில் ரூ.79 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 9 வங்கி ஊழியர்களின் சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கின. இன்றும் அந்த வேலை நிறுத்தம் தொடர்கிறது.

    இந்த சூழலில் நமது நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 2017-18 நிதி ஆண்டில் ரூ.79 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் ஒரு மணி நேரத்துக்கு இவை ரூ.9 கோடி நஷ்டத்தை சந்திக்கின்றன என்றும் அவை கூறுகின்றன.

    2017-18 நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் அளவு ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் கோடி ஆகும்.

    இதன்மூலம் பொதுத்துறை வங்கிகளின் நஷ்டத்தின் அளவும், வராக்கடன் அளவும் வங்கி வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டி உள்ளன.

    பொதுத்துறை வங்கிகளின் இத்தகைய பரிதாப நிலை காரணமாகத்தான் மத்திய அரசு கடந்த ஆண்டு வங்கிகளின் மறுமுதலீட்டு நிதியாக ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி வழங்கப்படும் என அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோ 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் கேத்ரினா கோஸ்லோவாவிடம் வீழ்ந்தார்.
    பாரீஸ்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 4-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) 6-1, 6-4, 7-6 (7-1) என்ற நேர் செட்டில் முகமது சவாத்தை (எகிப்து) தோற்கடித்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் கேத்ரினா கோஸ்லோவாவிடம் (உக்ரைன்) வீழ்ந்தார். பிரெஞ்ச் ஓபனில் நடப்பு சாம்பியன் முதல் சுற்றுடன் வெளியேறுவது கடந்த 13 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதே போல் தரவரிசையில் 85-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை வாங் குயாங் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் மங்கை வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார். 
    ×