என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » MGR birth centenary
நீங்கள் தேடியது "MGR birth centenary"
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 11 ஆயுள் தண்டனைக் கைதிகள் தண்டனைக் காலம் முடிவடையும் முன்னரே இன்று விடுதலை செய்யப்பட்டனர். #MGRBirthCentenary #TNPrisonersReleased
சென்னை:
முதல்கட்டமாக புழல் ஜெயிலில் இருந்து கடந்த 6-ந் தேதி 67 ஆயுள்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 12-ந் தேதி 52 கைதிகளும், 20-ம் தேதி 47 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையானவர்கள் வெளியில் சென்று சுய தொழில் செய்வதற்காக தனியார் தொண்டு நிறுவனத்தினர் உபகரணங்கள் வழங்கினர்.
இந்நிலையில், 4-ம் கட்டமாக இன்று 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புழல் சிறையில் இருந்து இந்த கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை அழைத்து செல்வதற்காக உறவினர்கள் இன்று அதிகாலையிலேயே வந்து சிறைவாசல் முன்பு காத்திருந்தனர். சிறையில் இருந்து 11 பேரும் வெளியே வந்ததும், அவர்களை உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்றனர். #MGRBirthCentenary #TNPrisonersReleased
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறைச் சாலைகளில் 10 ஆண்டு சிறை தண்டனை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதிலும் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை படிப்படியாக விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின.
முதல்கட்டமாக புழல் ஜெயிலில் இருந்து கடந்த 6-ந் தேதி 67 ஆயுள்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 12-ந் தேதி 52 கைதிகளும், 20-ம் தேதி 47 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையானவர்கள் வெளியில் சென்று சுய தொழில் செய்வதற்காக தனியார் தொண்டு நிறுவனத்தினர் உபகரணங்கள் வழங்கினர்.
இந்நிலையில், 4-ம் கட்டமாக இன்று 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புழல் சிறையில் இருந்து இந்த கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை அழைத்து செல்வதற்காக உறவினர்கள் இன்று அதிகாலையிலேயே வந்து சிறைவாசல் முன்பு காத்திருந்தனர். சிறையில் இருந்து 11 பேரும் வெளியே வந்ததும், அவர்களை உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்றனர். #MGRBirthCentenary #TNPrisonersReleased
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 47 பேர் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். #MGRcentenaryfunction #TNPrisonersReleased
சென்னை:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் அதற்கான விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.
அதில், மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புழல் சிறையில் இருந்து 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். இதனை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் தெரிவித்துள்ளார். #MGRcentenaryfunction #TNPrisonersReleased
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் அதற்கான விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.
அதில், மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனை கைதிகள் கடந்த 6ந்தேதி விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின்னர் கடந்த 12ந்தேதி 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், புழல் சிறையில் இருந்து 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். இதனை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் தெரிவித்துள்ளார். #MGRcentenaryfunction #TNPrisonersReleased
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 67 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். #MGRcentenaryfunction #TNPrisonersReleased
சென்னை:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என ஏற்பாடு செய்து எம்.ஜி.ஆரின் புகழ்பாடியது.
அவ்வகையில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி, 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள ஆயுள் கைதிகள் கணக்கெடுக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட உள்ள 67 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. நன்னடத்தை குழு பரிந்துரையின்படி இந்த 67 பேரை விடுவிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தது.
அதன்படி, முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனைகளும் இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் மறுவாழ்விற்காக அனைவருக்கும் பெட்ரோல் பங்குகளில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்க சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் இருந்தால் பின்னர் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MGRcentenaryfunction #TNPrisonersReleased
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என ஏற்பாடு செய்து எம்.ஜி.ஆரின் புகழ்பாடியது.
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள ஆயுள் கைதிகள் கணக்கெடுக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட உள்ள 67 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. நன்னடத்தை குழு பரிந்துரையின்படி இந்த 67 பேரை விடுவிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தது.
அதன்படி, முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனைகளும் இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் மறுவாழ்விற்காக அனைவருக்கும் பெட்ரோல் பங்குகளில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்க சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் இருந்தால் பின்னர் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MGRcentenaryfunction #TNPrisonersReleased
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X