search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madipakkam"

    • மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்.
    • ஆகஸ்ட் 25-ந் தேதி, மடிப்பாக்கத்தில் நடக்க உள்ளது.

    சென்னை:

    மடிப்பாக்கம் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் நடத்தும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கான லோகோவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

     சென்னையின் முன்னணி தன்னார்வ அமைப்பாகிய மடிப்பாக்கம் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் (Madipakkam Social Service Trust), தமது சேவையின் 350-ஆவது வாரத் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 25-ந் தேதி, மடிப்பாக்கத்தில் மாபெரும் மாரத்தான் நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

    இந்த போட்டி தொடர்பான சிறப்பு லோகோவை, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் குடும்பமாக பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியில் ஒரு கிலோ மீட்டர், மூன்று கிலோ மீட்டர் மற்றும் ஐந்து கிலோ மீட்டர் என மாரத்தான் ஓட்டங்கள் மூன்று விதமாக நடைபெறும்.

    மரம் நடுதலை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட உள்ள இந்த மாரத்தான் போட்டியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மிகப்பெரிய விழிப்புணர்வு பதிவை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த மாரத்தான் ஓட்டம், காலை 8.30 மணிக்கு முடிவடைகிறது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.

    கடந்த ஏழு ஆண்டுகளாக, மரங்கள் நடும் பணியில் தீவிரமாக செயலாற்றி கவனம் ஈர்த்து வரும் இந்த டிரஸ்ட், 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மூவரசம்பேட்டை, வேளச்சேரி, சுண்ணாம்பு குளத்தூர், பள்ளிக்கரணை போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள், 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் 7500-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அவற்றை பத்திரமாகப் பராமரித்து வருகிறது.

    மேலும், இரண்டு பெரிய நீர் நிலைகளை தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தூர்வாரியும் உள்ளது.

    ஒவ்வொரு வார இறுதியிலும் மரம் நடுதல் மற்றும் நட்ட மரங்களைப் பராமரிக்கும் பணிகளை துரிதமாக கையாண்டு வருகிறது.

    அந்த வகையில் இவ்வமைப்பின் 350-வது வார சேவையைக் கொண்டாடும் விதமாக இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.msstrust.org

    • நாளை முதல் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.
    • N45B வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் CMRL மெட்ரோ ரெயில் நிலையங்கள் (Metro Stations) அமைத்திட பணிகள் நடைபெற்று வருவதால். அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல CMRL நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட தடம் எண்.18D, 18P, M1, 45ACT நாளை முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

    தடம் எண்.14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு இயக்கப்பட்ட பேருந்து நாளை முதல் மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி, வழியாக கிண்டி ரெயில் நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளது. மேலும், தடம் எண்.S14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை, மடிப்பாக்கம் கூட்ரோடு, வாணுவம்பேட்டை வழியாக NGO காலனி பேருந்து நிலையத்திற்கு 14M வழித்தடத்திலேயே 25 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.

    தடம் எண்.M1 CT கீழ்கட்டளை பேருந்து நிலையத்திலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.

    தற்போது தடம் எண்.76, 76B, V51, V51X ஆகிய வழித்தட பேருந்துகள் மேடவாக்கம் கூட்ரோடு, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் நாளை முதல் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

    மேலும் கீழ்கட்டளையிலிருந்து மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட M18C, 18N மற்றும் N45B வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ

    வழியாக இயக்கப்பட உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    மடிப்பாக்கம் அருகே 3 கிலோ கஞ்சாவுடன் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கத்தை அடுத்த கீழ்கட்டளை காந்திநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது37). ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அவரது அட்டோவை நிறுத்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    மடிப்பாக்கத்தில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி மஞ்சுளா (50). இன்று காலை அருகே உள்ள கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறித்துச் சென்று விட்டார்.

    இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    மடிப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் - மூவரசன் பேட்டை மெயின் ரோட்டில் கங்கை அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள உண்டியலை மர்ம ஆசாமிகள் நேற்று உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச்சென்று விட்டனர். இந்த கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா வயரை துண்டித்து விட்டு இந்த கொள்ளை நடந்துள்ளது.

    இதன் பின்புறம் வல்ல விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவில் உண்டியல் நேற்று இரவு உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள பாதாள விநாயகர் கோவிலில் நேற்று இரவு உண்டியலை உடைத்து கொள்ளயடிக்க முயற்சி நடந்தது. அப்போது, அபாயமணி ஒலித்தது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். இதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    மடிப்பாக்கத்தில் பீர் பாட்டிலால் அடித்து லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    திரிசூலம் இலுப்பை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (24). மினி லாரி டிரைவர் நேற்று முன்தினம் இரவு மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் மது குடித்தார்.

    அவருக்கு அருகே 5 பேர் கும்பலும் மது குடித்துக் கொண்டிருந்தனர். குடிபோதையில் இவர்களுக்கும், சுரேஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் அது முற்றி தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கும்பல் சுரேஷ்குமாரை சுற்றி வளைத்து சினிமா பாணியில் பீர் பாட்டில்களால் தலையில் ஓங்கி அடித்து தாக்கினர்.

    மண்டை உடைந்ததால் நிலை குலைந்த சுரேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். சந்தேகத்தின் பேரில் ராஜா, சுடலை ராஜன், ராமச்சந்திரன், திலீப், கலைமணி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    முன் விரோதத்தில் இக்கொலை நடந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×