என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Madurai people missing"
மதுரை:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ். இவரது மகன் பேட்ரிக் (வயது 19). கேட்டரிங் படித்து வருகிறார்.
படிப்பில் போதிய திறன் இல்லாததால் ஆங்கில திறனை வளர்த்துக் கொள்வதற்காக பேட்ரிக், மதுரை எஸ்.எஸ்காலனி நாவலர் நகரில் உள்ள தனது தாத்தா சாம்சன் வீட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் தங்கி இருந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி தாத்தாவிடம் சொல்லிக்கொள்ளாமல் பேட்ரிக் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரது தாயார் சுக்கேஷினி போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, திண்டுக்கல்லில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். அதன்பிறகு 19-ந் தேதி முதல் பேட்ரிக்கின் செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அவர் எங்கே சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து பேட்ரிக்கின் தாயார் சுக்கேஷினியும், தாத்தா சாம்சனும் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மதுரை சோலையழகுபுரம், மகாலட்சுமி கோவில் 3-வது சந்து, அன்னமுத்து காம்பவுண்டைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மகன் மணிகண்டன் (வயது 34). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆக வில்லை.
கடந்த 24-ந் தேதி இரவு மணிகண்டன் வெளியே சென்று வருவதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாயார் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் ஜெய் ஹிந்துபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்