search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malakkan"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • 50 மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறையின் விரிவாக்கப் பணி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான பள்ளியில் (எல்வின் நிலையம்) நடந்தது. பள்ளி நிர்வாகி தயாளன் பர்னபாஸ், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் 150-க்கும் மேற்பட்ட வேம்பு. புங்கை. அரசமரம் மற்றும் புளியமர கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.

    இந்த மரக்கன்றுகள் சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களால் பராமரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    75 இளங்கலை வணிகவியல் துறை மாணவர்கள் மற்றும் 50 மன

    வளர்ச்சி குன்றிய மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் மற்றும் விரிவாக்கப் பணி பொறுப்பாளர் பாபுபிராங்கிளின் செய்திருந்தார்.

    ×