search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mariyal"

    • நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரமானது.

    பின்னர் சொந்த ஊருக்கு பக்தர்கள் செல்வதற்காக ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் குவிந்தனர்.

    விழுப்புரம், சென்னை செல்லும் ரெயிலில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றனர். ரெயிலில் இடம் கிடைக்காததால் பக்தர்கள், பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதேபோல தற்காலிக பஸ் நிலையத்திலும் பக்தர்கள் குவிந்தனர். போதிய பஸ் வசதி இல்லாததாலும், பஸ்சில் இடம் கிடைக்காமல் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மதுரை, திருச்சி பகுதிகளுக்கு அதிகாலை 4 மணி முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். திருக்கோவிலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போதிய பஸ் வசதி இல்லாததால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், திருக்கோவிலூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பஸ் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் அவதி அடைந்தனர். மேலும் 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்று விட்டு சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருந்தோம். இதனால் நாங்கள் களைப்பாக உள்ளோம்.

    போதிய பஸ் இல்லாமல் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. வரும் நாட்களில் இது போன்று பக்தர்களை காத்திருக்க வைக்காமல் பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

    • கண்மாயில் கழிவு நீரை திறந்துவிடும் தனியார் மது ஆலையை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • நடவடிக்கை எடுப்பதாக சிவகங்கை தாசில்தார் உறுதியளித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள உடைகுளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மது மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு பின்புறம் உடைகுளம் கிராமத்திற்கு சொந்தமான 160 ஏக்கர் விவசாய நிலமும், அதற்கு நீர்வள ஆதாரமாக திகழும் கண்மாயும் உள்ளது.

    மது ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அந்த கண்மாய்க்குள் திறந்து விடுகின்றனர். இதனால் கண்மாய் நீரின் தன்மை மாறுவதுடன் நிலத்தடி நீரும் மாசு பட்டு உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் பல ஆண்டுகளாக விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இந்த நீரை அருந்தினால் இறந்துவிடுவதால் மேய்ச்சலுக்காக அழைத்து செல்ல முடியாத நிலை யும் ஏற்பட்டுள்ளது. இந்த மது ஆலைக்கு வரும் கனரக வாகனங்களால் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் பழுதாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் நேற்று கனரக வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காளையார்கோவில் தாசில்தார் கிராம மக்களை சமாதானம் செய்ததுடன், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மது ஆலை அதிகாரி களிடம் விசாரணை நடத்திய தாசில்தார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    ×