search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marriage dispute"

    • தம்பதிகளுக்கு இடையே சில மாதங்களாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
    • மறுநாள் காலை ஐஸ்வர்யா எழுந்து பார்த்தபோது நவ்யஸ்ரீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கொலை தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    25 வயதான நவ்யஸ்ரீ என்பவர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு எஸ்.எம்.வி. லேஅவுட்டில் உள்ள கெங்கேரியில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இடையே சில மாதங்களாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    அதன்படி கடந்த செவ்வாய்கிழமை அன்று நவ்யஸ்ரீ, தனது தோழியான ஐஸ்வர்யாவை போனில் தொடர்பு கொண்டு திருமண வாழ்க்கை குறித்து வருத்தத்துடன் பேசியுள்ளார். இதனால் நவ்யஸ்ரீ-யை சந்தித்து பேசுவதற்காக ஐஸ்வர்யா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஐஸ்வர்யா, மற்றொரு நண்பரான அனில் என்பவருடன் சேர்ந்து நவ்யஸ்ரீ, பிரச்சனையான திருமண வாழ்க்கை குறித்து விவாதித்துள்ளார். அதில் நவ்யஸ்ரீ அவரது கணவர் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.

    இதையடுத்து மூவரும் இரவு உணவு அருந்தி விட்டு அனில் புறப்பட்டு சென்றதும், ஐஸ்வர்யா, நவ்யஸ்ரீ வீட்டிலேயே தங்கியுள்ளார். மறுநாள் காலை ஐஸ்வர்யா எழுந்து பார்த்தபோது நவ்யஸ்ரீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து போலீசாருக்கு தகவல் அளித்த ஐஸ்வர்யா நடந்த விவரங்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நவ்யஸ்ரீ மீது சந்தேகம் கொண்ட கிரண், இரவு நேரத்தில் சாவியை பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்து கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வந்தவாசி அருகே சாப்பாட்டு விருந்தில் கூட்டு, பொறியல் வைக்காததால் திருமண விழாவில் ஏற்பட்ட தகராறில் 5 பேரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக சென்னை பிரியாணி மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மேல்நெமிலி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் வந்தவாசி டவுன் ஆரணி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது.

    நேற்று இரவு வரவேற்பு விழா நடந்தது. அப்போது உறவினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த மணப்பெண்னின் தந்தை ஆறுமுகத்தின் நண்பரான சீனிவாசன் (45) (பிரியாணி மாஸ்டர்) இவரது மனைவி பிரேமா (40) இருவரும் பைக்கில் வந்தனர்.

    சீனிவாசன் தம்பதிக்கு உணவு பரிமாறப்பட்டது. மணமகனின் உறவினரான பச்சையப்பன் (35) என்பவர் பரிமாறியுள்ளார். கூட்டு, பொறியல் சீனிவாசனுக்கு வைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஏன் கூட்டு பொறியல் இல்லை என சீனிவாசன் கேட்டுள்ளார். நள்ளிரவு 1 மணி ஆவதால் கூட்டு பொறியல் இல்லை என கூறியுள்ளார்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பச்சையப்பனை சீனிவாசன் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த பச்சையப்பன் உறவினர்கள் சீனிவாசனை தாக்கினர்.

    இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பச்சையப்பன் அவரது உறவினர்கள் முனுசாமி (44), ஆகாஷ்(20), சேகர்(51), ராஜா ( 50) ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக முனுசாமி சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சீனிவாசனுக்கும் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிச்சையில் இருந்தார்.

    இன்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முயன்ற சீனிவாசனை கோட்டைமூலை பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    ×