search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monkey Kulla"

    • மதுரையில் உலாவும் ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    • மண் சேறு பூசியபடி உலா வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட புறநகர் பகுதி களில் 'குரங்கு குல்லா' அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வீடுக ளுக்குள் புகுந்து பணம், நகை, பொருட்களை திருடிச் செல்வதாக புகார் எழுந்து உள்ளது.

    குரங்கு குல்லா, டவுசர் அணிந்து கையில் ஆயுதங்க ளுடன் மர்ம நபர்கள் நடந்து செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட பகுதி கள் சமீப காலமாக விரி வாக்கம் பெற்று வருகின்றன. இங்கு நூற்றுக்கணக்கில் புதிய வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறி வருகின்ற னர். இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த சில நாட்க ளாக 'குரங்கு குல்லா' அணிந்த மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது.

    சத்யா நகர் பகுதியில் வசிப்பவர் பன்னீர்செல்வம், டிரைவர். இவரது மனைவி தவமணி (39) காற்றுக்காக கதவை திறந்து வைத்து வீட்டு தூங்கி உள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் ஆயுதங்களை காட்டி அவரை மிரட்டி 5¾ பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றனர்.

    தொடர்ந்து கோவில் பாப்பாகுடி ஏ.ஆர். சிட்டி பகுதியில் நுழைந்த இந்த கொள்ளை யர்கள் அங்குள்ள வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் கேட் ஏறி குதித்துள்ளனர். அங்கு சிசிடிவி கண்காணிப்பு கேமரா இருப்பதை தாமதமாக பார்த்த நபர்கள் அதனையும் அடித்து நொறுக்கி உள்ளனர். பின்னர் வீட்டிற்கு உள்ளே குதித்து பூட்டை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு விழித்த வீட்டின் உரிமையாளர் மாடி பால்கனியிலிருந்து சத்தம் போட்ட போது, அங்கிருந்து அவர்கள் தப்பி உள்ளனர்.

    இந்த கும்பலில் சுமார் 10 பேர் இருப்பதாக கூறப்படு கிறது. இவர்கள் 3 அணி களாக பிரிந்து சென்று குறிப்பிட்ட வீதிகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளில்லாத வீடுகள் தவிர, ஆட்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உள்ளேயும் தைரியமாக புகுந்து பட்டா கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம். பொருட்களை கொள்ளை யடித்து செல்கின்றனர்.

    சில வீடுகளுக்குள் கற்களையும் வீசி செல்வதாக கூறப்படுகிறது. பிடிபட்டால் தப்பிக்க உடம்பில் எண்ணெய் மற்றும் மண் சேறு பூசியபடி இவர்கள் உலா வருகின்றனர்.

    இந்த 'குரங்கு குல்லா' திருடர்களால் மக்கள் பீதியில் உள்ளனர். கடந்த ஆண்டு இேத போன்ற புகார்கள் வந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் குரங்கு குல்லா திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

    போலீசார் தனிப்படை அமைத்து இவர்களை கண்டுபிடித்து ஏதேனும் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×