search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muppulisamy temple festival"

    • முப்புலிசாமி கோவில் உற்சவத்தையொட்டி ஜல்லிக்கட்டு நாளை நடக்கிறது.
    • அமைச்சர்கள் மூர்த்தி, பெரிய கருப்பன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்கின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் முப்புலி கோவில் உற்சவத்தை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நாளை நடைபெறுகிறது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட காளைகள் களத்தில் இறங்குகின்றன. ஏராளமான மாடுபிடி வீரர்களும் மாடுகளைப் பிடிக்க முன்பதிவு செய்துள்ளனர்.

    நாளை (11-ந் தேதி) சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பி.மூர்த்தி, கே. ஆர்.பெரிய கருப்பன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். முன்னதாக காளைக ளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே களத்தில் இறங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், டேபிள் சேர் மற்றும் விலை உயர்ந்த பரிசுகளும் வழங்கப்படு கிறது. பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடு களை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநில தலைவர் பி.ராஜசே கரன் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×