search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Member Enrollment Form"

    • அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.
    • அதிகமாக இளைஞர்களை அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

    தென்திருப்பேரை:

    ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஆழ்வார்திருநகரி யிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஆழ்வார் திருநகரி நகர செயலாளர் செந்தில் ராஜகுமார் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவ சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஸ்ரீவை குண்டம் வக்கீல் பிரிவு இணை செயலாளர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் புதிய உறுப்பினர் படிவத்தை வழங்கி பேசியதாவது:-

    அடுத்த ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி தான் என்று காவல்துறை அதி காரிகள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் சொல்லக் கூடிய அளவில் உள்ளது. எனவே அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், பழைய உறுப்பினர்கள் தங்களது அடையாள அட்டையை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

    அதிகமாக இளை ஞர்களை அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் போது அந்த பகுதியில் அ.தி.மு.க. வலு வான கட்சியாக மாறும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியை கைப்பற்ற கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் இளை ஞர்கள்- இளம் பெண்கள் பாசறை உறுப் பினராக சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நகர துணைச் செயலாளர் விஸ்வ நாதன், இணைச் செயலாளர் முகமது மாஜிதா, மாவட்ட பிரதிநிதி ஜெயராஜ், துணை செயலாளர்கள் இரட்டை முத்து, முஜிபுர் ரஹ்மான், வேலுச்சாமி, அனந்த வெங்கடாச்சாரி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மரிய அடைக்கலம், மகளிர் அணி செயலாளர் அமுதா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வேலுச்சாமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்புராஜ், விவசாய அணி செயலாளர் ஆனந்த பூபதி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் லட்சுமணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகாராஜன், அண்ணா தொழிற்சங்கம் பெரியசாமி, எஸ்.இ.டி.சி. பணிமனை செயலாளர் முருகானந்தம், வார்டு செயலாளர் மாரியம்மாள், தென்திருப்பேரை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கந்தன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

    ×