search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "O Paneerselvam"

    • மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்பட திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார். அப்போது, அம்பானிக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி அசத்தி இருக்கிறார்.

    இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    • அதிமுக ஒன்றுபட வேண்டும் என பலர் நினைக்கின்றனர்.
    • இரண்டாம் இடத்திற்கு தேசிய கட்சிகள் வர நாங்கள் அனுமதிக்க முடியாது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி, கே.சி.பழனிசாமி ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

    அப்போது, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி, கே.சி.பழனிசாமி கூட்டாக அறிவித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இருந்து வெளியே வருகிறோம். அதிமுக ஒருங்கிணைப்பு குழு என ஒன்றை அமைத்து அதிமுகவை இணைக்க உள்ளோம்.

    அதிமுக ஒன்றுபட வேண்டும் என பலர் நினைக்கின்றனர். எப்போதும் எவ்வளவு சதவீதம் வந்தது என பார்ப்போம். ஆனால் தற்போது 7 இடத்தில் டெபாசிட் போய்விட்டது.

    ஒரு தொகுதியை கூட அதிமுக வெல்லவில்லை. யாரோ அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள்.

    இரண்டாம் இடத்திற்கு தேசிய கட்சிகள் வர நாங்கள் அனுமதிக்க முடியாது.

    திமுகவை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் தயவு செய்து ஒன்றாக சேருங்கள். ஒற்றுமை வேண்டும் என்ற காரணத்திற்காக அதிமுக ஒருங்கிணைப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது.

    தொடர் தோல்விகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஈபிஎஸ் ஈகோ பார்க்க வேண்டாம்.

    இதுபோன்ற தோல்வியை அதிமுக ஒருபோதும் சந்தித்தது இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் ஒன்பதை தமிழக மக்கள் உணர்த்தியுள்ளனர்.

    தமிழகத்தில் திமுக vs பாஜக என்று இருப்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. தேசிய கட்சிகளுக்கு அடி பணிந்தோ, சார்ந்தோ அதிமுகவில் செயல்பட கூடாது.

    ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா மூவரும் ஒன்றுசேர வேண்டும் என்ற குரல் நான்கு திசையில் இருந்தும் எழுகிறது.

    அதிமுக ஒற்றுமை தான் எங்கள் விருப்பம், யாரையும் எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. நாடாளுமன்ற தேர்தல் முடிவு, அதிமுக தொண்டர்களுக்கு பேரிடி.

    மாவட்ட வாரியாக பயணம் செய்து, தொண்டர்களின் கருத்தை கேட்க உள்ளோம். சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும்.

    1991ல் அதிமுக ஒருங்கிணைப்புக்கு எதிராக ருஇந்த தலைவர்கள், தொண்டர்களால் ஒதுக்கப்பட்டனர். 1991 போலவே தற்போதும் அதிமுக ஒன்றுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டி.
    • ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், ராமநாதபரத்தில் போட்டியிடும் 5 ஓ.பன்னீர்செல்வங்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்மூலம், ராமநாதபுரத்தில், 5 ஓ.பன்னீர்செல்வங்களும் சுயேச்சையாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.

    • டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல்.
    • கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அவசர மனு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

    மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான மனுவில," தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்.

    இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை தழுவுவதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை.

    கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பொங்கல் விழாவிற்கு சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பிரதமர் மோடி பிறந்த பெருமைக்குரிய மாநிலம் குஜராத் என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை தமிழக பாஜக தலைவர் அன்னாமலையை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இன்று காலையில் புறப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அவர் பயணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. இவருடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்தனர்.

    இந்நிலையில், பொங்கல் விழாவிற்கு சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், பொங்கல் விழாவில் கலந்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, மேடையில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "விட்டு கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு குஜராத் வாழ் தமிழர்கள் உதாரணம். குஜராத் மாநிலம் புனிதமானது. மகாத்மா காந்தியை பெற்றெடுத்த மண் குஜராத்.

    பிரதமர் மோடி பிறந்த பெருமைக்குரிய மாநிலம் குஜராத்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • ஓ.பன்னீர்செல்வத்துடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்கின்றனர்.
    • குஜராத்தில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை தமிழக பாஜக தலைவர் அன்னாமலையை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இன்று காலையில் புறப்பட்டுள்ளார்.

    அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அவர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இவருடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்கின்றனர். மேலும், குஜராத்தில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும் என துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். #Cauvery #Paneerselvam
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரிநீரை பெறுவதற்கு மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து ஜெயலலிதா காலம் வரையில், அந்த இருபெரும் தலைவர்கள் எடுத்த நடவடிக்கையால் தான் இப்பிரச்சினை உயிரோட்டமாக இருக்கிறது.

    இன்றைக்கு மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. அதில் இருக்கிற சாதக, பாதகங்களை கலந்துபேசி தருகின்ற நேரத்தில், ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். தமிழக சட்டமன்ற மானியக்கோரிக்கை கூட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் உரிய நிதி அளிக்கப்படும். இதில் பல்வேறு இனங்களில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்புவார்கள். தமிழக அரசின் சார்பில் உரிய பதிலை நாங்கள் அளிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது காவிரி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் உங்களை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாக சொல்லி இருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் என்னை சந்தித்தால், அந்த சந்திப்புக்கு பின்னர் என்னுடைய முடிவை நான் தெரிவிப்பேன்’ என்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.  #Cauvery #Paneerselvam

    ×