என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "OPaneerselvam"
- கள்ளச்சாரயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.
- நீட் தேர்வு ரத்து குறித்த தமிழக எம்பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தஞ்சையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டது.
குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. குறுவை விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கள்ளச்சாரயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்ட வேண்டுமென்ற ஒருவரை மத்திய ஜல்சக்தி இணையமைச்சராக்கி உள்ளனர்.
நீட் தேர்வு ரத்து குறித்த தமிழக எம்பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். 40 எம்பிக்களும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இதுவரை அதிமுகவை காப்பாற்றியது யார் என்று சசிகலாவிற்கு, ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாக சசிகலா எப்படி சொல்கிறார். அதிமுகவில் எல்லா சாதியினரும், அனைத்து பொறுப்புகளிலும் உள்ளனர். அதிமுகவில் எந்த சரிவும் இல்லை.
தோல்வியை சந்திக்காத அரசியல் எது ? 3 ஆண்டுகள் விடுமுறையில் சென்றிருந்தார். இப்போது ரீ என்ட்ரி என்கிறார்.
2021ல் அரசியல் ஓய்வு என கூறிய சசிகலா, இப்போது ஏன் வருகிறார்? இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்யை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்.
அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ். மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டவர் ஓபிஎஸ்.
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
- சர்வாதிகார போக்கிற்கு எதிராக கேசவன் தீக்குளிக்க முயன்றது வேதனை அளிக்கிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு நிலவி வருவதா ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவத்துள்ளார். சர்வாதிகார போக்கிற்கு எதிராக கேசவன் தீக்குளிக்க முயன்றது வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்