search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old Courtalam"

    • குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி, செங்கோட்டை, புளியரை, மேலகரம், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது.

    மலைப்பகுதிகளிலும் மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அபாய ஒலி எழுப்பப்பட்டு மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இன்று காலையில் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் அங்கு தண்ணீர் மேலும் அதிகரித்ததால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் உடனடியாக அப்புறப்படுத்தப் பட்டனர்.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிற்றருவி மற்றும் புலியருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதான அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். 

    • ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.
    • ரம்யமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

    அதன்படி தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தென்காசி மாவட்டத்திலும் அவ்வப்போது சாரல் மழை ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் ரம்யமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீர் மிதமாக விழுந்து வரும் நிலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்தால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் தொடங்கவில்லை.
    • தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம், புலிஅருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் தொடங்கவில்லை.

    பழைய குற்றாலம்

    கடந்த சில நாட்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்கிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம், புலிஅருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சீராக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

    ஆனால் பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் வழியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திலேயே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் முதியவர்கள் அருவிக்கு செல்வதில் சிரமம் உள்ளது. மேலும் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மட்டும் இரவு முழுவதும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பழைய குற்றாலம் அருவியில் இரவில் குளிக்க இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மட்டுமன்றி பழையகுற்றாலத்தை நம்பி வாழும் குத்தகைகாரர்கள், கடை உரிமையாளர்கள், சிறுவியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

    எனவே அனைத்து அருவிகளைப்போல் பழைய குற்றாலம் அருவியிலும் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும். என்று வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×