search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Once Upon a Time in Madras"

    • பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்.
    • இதில் பரத், அபிராமி, பவித்ரா லட்சுமி, தலைவாசல் விஜய், அஞ்சலி நாயர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ். இதில் பரத், அபிராமி, பவித்ரா லட்சுமி, தலைவாசல் விஜய், அஞ்சலி நாயர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    ஃபிரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் படத்தை தயாரித்துள்ளார். ஜோஸ் பிராங்க்ளின் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

    சென்னையை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாகி இருப்பதால் படத்துக்கு ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் 26-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பரத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் காலத்தை நாம் தாண்டி விட்டோம். திறமை இருந்தால் வெற்றி பெறலாம். பேராசை என்பது எனக்கு எதிலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் அபிராமி பேசியதாவது:-

    படத்தில் நான் ஒரு திருநங்கைக்கு தாயாக நடித்துள்ளேன். ஒரு நடிகைக்கு ஒரு கதை வரும்போது எப்படியாவது இதை பண்ணிவிட வேண்டும் என்று தோன்றும். அப்படி பண்ணிய படம் தான் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் படம். துப்புரவு தொழிலாளியாகவும் நடித்து உள்ளேன், திருநங்கைக்கு தாயாகவும் நடித்து உள்ளேன். படத்தில் நடிப்பதற்கு முன்பு இயக்குனரிடம் நான் போட்ட கண்டிஷன் என்னவென்றால் படத்தின் கதைப்படி எனக்கு மகளாக நடிப்பவர் ஒரு திருநங்கையாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு இயக்குனரும் சம்மதித்தார்.

    நமக்காக பணிபுரிவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் தான் நினைப்பார்கள் அப்படிதான் படத்தின் தயாரிப்பாளர் எம்.பி. ஆனந்த் பார்த்துக் கொண்டார். தயாரிப்பாளர் ஆனந்திடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். எப்போதும் இப்படியே இருங்கள். இந்த படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றதும் மாறி விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத்.
    • ஒரு ஹைப்பர் லிங்க் படமாக உருவாகியுள்ளது

    ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் பரத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் . இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

    பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத். அதற்கடுத்து பட்டியல், எம் மகன், வெயில், வானம், காளிதாஸ், 555 போன்ற பலப் படங்களில் நடித்தார்.

    இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. "ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்பொழுது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர் ,மற்றும் ஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    எதிர்பாராத விதமாக கிடைக்கும் துப்பாக்கியை வைத்து நான்கு கதாப்பாத்திரத்திற்குள் ஒரு ஹைப்பர் லிங்க் கதைக்களத்தோடு  உருவாகியுள்ளது இத்திரைப்படம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தை பிரசாத் முருகன் இயக்கியுள்ளார்.
    • இந்த படத்தில் பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளனர்.

    ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பி.ஜி.எஸ். ப்ரொடக்ஷன்ஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A Time In Madras).

    இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளனர். நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

     


    இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் பிரசாத் முருகன், "நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கருத்தியல் அரசியலுடன், கமர்ஷியல் கலந்து பேசியுள்ளோம்," என்று தெரிவித்தார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

     


    நெடுநல்வாடை படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார். காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

    'ராட்சசன்' படத்தின் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குநராக நட்ராஜ் பணியாற்றியுள்ளார். படத்தின் சண்டைக்காட்சிகளை சுகன் அமைத்துள்ளார். காஸ்ட்யூம் டிசைனராக ரிஸ்வானா பணியாற்றியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×