search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "One horned elephant"

    • சுமார் 20 நிமிடம் சண்டையிட்ட காட்டெருமைகள்.
    • யானை வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் குன்னூர் ஜிம்கானா கோல்ப் விளையாட்டு மைதானத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் 20 நிமிடம் சண்டையிட்ட காட்டெருமைகளை அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்த காட்சிகளை செல்போனில் படம் ஒருவர் இதனை சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளார்.

    நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் அவ்வப்போது சாலைப் பகுதிக்கு வந்து செல்கின்றன. இதில் ஒற்றைக் கொம்பு ஆண் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம்-குன்னூா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து சாலைகளில் நடமாடி வருகிறது.

    இந்த ஒற்றைக் கொம்பு யானை, காட்டேரி குடியிருப்பு பகுதி மற்றும் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் நடமாடியது. மேலும், சில நேரங்களில் சாலையில் நடமாடும் இந்த யானை வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

    எனவே ஒற்றைக் கொம்பு யானையால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க 15 போ் கொண்ட வன ஊழியா்கள் பணி அமா்த்தப்பட்டு கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக குன்னூா் வனச்சரகா் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளாா்.

    • முகாம் அமைத்து கண்காணிப்பு
    • பொதுமக்கள் அச்சம்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள துரிஞ்சிகுப்பம் பகுதியில் ஒற்றைக் கொம்புடைய யானை ஒன்று நேற்று முன்தினம் இரவு முதல் சுற்றி திரிந்து வருகிறது.

    இந்த ஒற்றை கொம்பு யானையை கண்ட அப்பகுதி மக்கள் செங்கம் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

    இதை தொடர்ந்து துரிஞ்சிகுப்பம் பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றைக்கொம்பு யானையை கண்காணித்து வருகின்றனர். மேலும் துரிஞ்சிகுப்பம், கல்லாத்தூர், ஊர்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு டாம்டாம் மூலம் இரவு நேரங்களில் வெளியில் வரக்கூடாது எனவும் ஒற்றைக் கொம்பு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இந்த ஒற்றைக் கொம்பு காட்டு யானை ஜவ்வாதுமலை பகுதியில் கடந்த 10 வருடங்களாக சுற்றி வருவதாகவும் குறிப்பாக ஆலங்காயம், ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 வருடங்களாக சுற்றி வந்துள்ளது. மேலும் தற்போது முதல் முறையாக செங்கத்தை ஒட்டி உள்ள ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள துரிஞ்சிகுப்பம் பகுதிக்கு இந்த ஒற்றை கொம்பு யானை வழித்தடம் மாறி வந்துள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் செங்கம் வனத்துறை ரேஞ்சர் பழனிசாமி தலைமையில் வனத்துறை அலுவலர்கள் துரிஞ்சிகுப்பம், கல்லாத்தூர், ஊர்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் முகாம் அமைத்து ஒற்றைக்கொம்பு யானையை கண்காணித்து வருகின்றனர்.

    ×